முக்கிய விரதங்கள்

வேண்டும் வரம் அருளும் ஆனி பவுர்ணமி... விரதம் இருந்து வழிபடும் முறை...

Published On 2023-07-02 06:32 GMT   |   Update On 2023-07-02 06:32 GMT
  • பவுர்ணமியில் விரதம் இருந்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
  • 16 பேறுகளும் நம்மை வந்தடையும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு .

ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. இந்த நாளில் நிலா தன் முழு பிரகாசத்துடன் பரிணமிக்கிறது. இதனால் வானத்தில் எழும் நேர்மறை அதிர்வலைகள் பூமியையும் தொடும். பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். பவுர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு உகந்தது. இந்த நாளில் செய்யப்படும் பூஜையால் அம்பிகையின் பரிபூரணமான அருளைப் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. பவுர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் கூடுதல் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்பிகை ஆலயங்களில் நடைபெறும் அபிஷேகம், அன்னதானம், சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். வீடுகளில் அவரவர் குலதெய்வ வழிபாட்டிற்கு பிறகு குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்யலாம். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம். இதனால் ஆயுள் பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம், தனலாபம் கல்வியில் மேன்மை என நினைத்தவரம் கிடைக்கச் செய்வாள்.

அதே போல் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்ட வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டு வீடுகளில் சத்ய நாராயண பூஜைகளும் செய்வதுண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். 16 பேறுகளும் நம்மை வந்தடையும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு . பூஜைகள் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம் என்ற போதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரவல்லது. எல்லா பவுர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்து வர வாழ்வில் மேன்மை அடையலாம்.

சித்ரா பவுர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.

வைகாசி பவுர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணம் கைகூடும்.

ஆனி பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

ஆடி பவுர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் அதிகரிக்கும்

ஆவணி பவுர்ணமியில் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்.

புரட்டாசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிறையும்.

ஐப்பசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசிப் பிணிகள் நீங்கும்.

கார்த்திகை பவுர்ணமியில் விளக்கேற்றினால் புகழ் ஓங்கும்.

மார்கழி பவுர்ணமியில் விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தை பவுர்ணமியில் விளக்கேற்றினால் நன்மைகள் அதிகரிக்கும்.

மாசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் துன்பங்கள் விலகும்.

பங்குனி பவுர்ணமியில் விளக்கேற்றினால் தர்மம் செய்த பலன் கிட்டும்.

இன்றைய தினம் நமது இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். இல்லங்களை தெய்வங்கள் குடிகொள்ளும் ஆலயமாக்குவோம். அனைத்து வளங்களும் கிடைக்கப்பெற்று வாழ்வில் வளம் பெறுவோம்.

Tags:    

Similar News