முக்கிய விரதங்கள்

அம்மன் விரத வழிபாடும், பலன்களும்

Published On 2023-07-09 08:31 GMT   |   Update On 2023-07-09 08:31 GMT
  • வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.
  • சமயபுரம் மாரியம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

* மதுரை மீனாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு, தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.

* காஞ்சி காமாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் தீராத கஷ்டங்கள் கூட விரைவாக ஒரு தீர்வுக்கு வந்துவிடும்.

* இருக்கன்குடி மாரியம்மனை விரதம் இருந்து வழிபட்டால் உடல் உபாதைகள் தீரும். குறிப்பாக வயிற்று வலி, கை, கால் வலி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.

* அமாவாசை, பவுர்ணமி தினங்களில் விரதம் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் புனிதநீரில் நீராடி பின்பு அம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

* வெக்காளி அம்மனை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனை மனதார நினைத்து வேண்டிக்கொண்டால் நல்ல பலன் உண்டு.

* வாராஹி அம்மனை விரதம் இருந்து பஞ்சமி திதியில் விரலி மஞ்சள் மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.

Tags:    

Similar News