இஸ்லாம்
திட்டுவிளை கந்தூரி விழாவில் யானை ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

திட்டுவிளையில் தர்கா கந்தூரி விழா: பிறை கொடியுடன் நடந்த யானை ஊர்வலம்

Published On 2022-03-01 03:45 GMT   |   Update On 2022-03-01 04:20 GMT
திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் பிறை கொடியுடன் யானை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி ஆண்டு பெருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் நடந்தது.

நேற்று மதியம் பிறை கொடி தாங்கிய யானை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் சிங்காரி மேளத்துடன் பள்ளிவாசல் முன்பு இருந்து தொடங்கி திட்டுவிளை சுற்றுவட்டார வீதிகள் வழியாக வந்தது. இறுதியில் பள்ளிவாசல் முன்பு ஊர்வலம் நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவு 8.15 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேருரை நடந்தது. இதில் திட்டுவிளை முஸ்லிம் ஜமாத் முக்தவல்லி மைதீன் பிள்ளை தலைமை தாங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை திட்டுவிளை ஜமாத் முக்தவல்லி மைதீன் பிள்ளை மற்றும் தலைவர் முகமது அசன், பீர்முகமது, பக்கீர் பாவா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், விழா கமிட்டி உறுப்பினர்கள், கவுரவ ஆலோசகர்கள், ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகம் இணைந்து செய்திருந்தனர்.
Tags:    

Similar News