இஸ்லாம்
குலசேகரன்பட்டினத்தில் கந்தூரி விழாவில் யானையில் கொடி ஊர்வலம்

குலசேகரன்பட்டினத்தில் கந்தூரி விழா: யானையில் கொடி ஊர்வலம்

Published On 2022-02-05 03:50 GMT   |   Update On 2022-02-05 03:50 GMT
குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸலியார் செய்யது சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றமும், மஹ்ரிப் தொழுகைக்கு பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸலியார் செய்யது சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இரவு கொடியேற்றமும், மஹ்ரிப் தொழுகைக்கு பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழா நாட்களில் மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.

வருகிற 14-ந் தேதி இரவு 11 மணிக்கு மார்க்க சொற்பொழிவு, இரவு 1 மணிக்கு சந்தனம் பூசுதல், அதிகாலை 3 மணிக்கு ஹத்தம் தமாம் செய்து துவா ஓதப்படும். 15-ந் தேதி இரவு 2 மணிக்கு தர்காவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம், காலையில் வீடு தோறும் தப்ரூக் வழங்கல் நடைபெறும். 16-ந்தேதி தப்ரூக் வழங்கல், 17-ந் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரை விளக்கேற்றுதல், 18-ந் தேதி கொடியிறக்கமும், தப்ரூக் வழங்கலும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை முத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் மற்றும் கந்தூரி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News