ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித உபகார அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புனித உபகார அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-05-17 03:56 GMT   |   Update On 2022-05-17 03:56 GMT
காவல்கிணறு இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
காவல்கிணறு இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் கொடியேற்றினார். விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 8-ம் திருநாள் காலை திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.

9-ம் திருநாள் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் உறுதிப்பூசுதல் விழா நடக்கிறது.

பிற்பகல் 3 மணிக்கு அன்னையின் தேர் பவனியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் திருநாள் மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் ஆரோக்கியராஜ், வினித்ராஜா மற்றும் பங்கு மேய்ப்பு பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News