கிறித்தவம்
செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா

செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா

Published On 2022-05-02 05:53 GMT   |   Update On 2022-05-02 05:53 GMT
காரைக்கால் செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழாவில் 5 தேர்கள் பவனி சென்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு வீதி தருமபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று  இரவு 5 தேர் பவனி நடைபெற்றது. காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மின்விளக்கு அலங்காரத்தில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் பவனி சென்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News