ஆட்டோ டிப்ஸ்

டெலிவரிக்காக கோகோரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்தும் ஜொமாட்டோ

Published On 2023-03-30 09:24 GMT   |   Update On 2023-03-30 09:24 GMT
  • இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோகோரோ நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது.
  • 2030 வாக்கில் டெலிவரி பணிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் பயன்படுத்த ஜொமாட்டோ திட்டம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த, ஜொமாட்டோ நிறுவனம் கோகோரோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியின் கீழ் கோகோரோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஜொமாட்டோவுக்கு வழங்கும்.

ஜொமேட்டோ நிறுவனம் 2023 இறுதிக்குள் 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. டெலிவரி ஏஜண்ட்களுக்கு உதவும் வதையில் கோடக் மஹிந்திரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடன் உதவி வழங்க இருக்கிறது.

"எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் குறைந்த விலையில் கிடைப்பதோடு, நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் டெலிவரி ஊழியர்களுக்கு அதிக லாபம் ஈட்டிக் கொடுக்கும்," என ஜொமாட்டோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மோகித் சர்தானா தெரிவித்தார். 

Tags:    

Similar News