search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இரண்டு சீன வீரர்கள்
    X

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இரண்டு சீன வீரர்கள்

    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இரண்டு சீன வீரர்களை பெஷாவர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த வருடத்திற்கான பி.எஸ்.எல். சீசனில் இரண்டு சீன வீரர்கள் விளையாட உள்ளனர். இருவரையும் பெஷாவர் ஷல்மி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    சீனாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய அணிகள் உள்ளன. இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை. பெஷாவர் ஷல்மி அணியின் உரிமையாளர் ஜாவித் அப்ரிடி அடுத்த மாதம் சீனா செல்கிறார். அப்போது அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை தங்களது சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. தற்போது சீனாவை பொது இடமாக கொண்டு விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×