என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2021ம் ஆண்டு மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்த இங்கிலாந்து விருப்பம்
Byமாலை மலர்9 Aug 2017 2:10 PM GMT (Updated: 9 Aug 2017 2:52 PM GMT)
2021ஆம் ஆண்டு பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கு இங்கிலாந்து முயற்சி செய்ய உள்ளது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கால்பந்து விளையாட்டு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியை பிரிட்டனில் தொலைக்காட்சி வாயிலாக 4 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்நிலையில், 2021ம் ஆண்டு பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரை இங்கிலாந்தில் நடத்த முயற்சி செய்யப்படும் என இங்கிலாந்து கால்பந்து சங்கம் இன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இதற்கான போட்டியில் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு யூரோ தொடரில் இங்கிலாந்து வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டம் நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதாகவும், மிகப்பெரிய ஐரோப்பிய தொடரை நடத்தும் அளவுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இங்கிலாந்து கால்பந்து சங்க தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கால்பந்து விளையாட்டு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியை பிரிட்டனில் தொலைக்காட்சி வாயிலாக 4 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்நிலையில், 2021ம் ஆண்டு பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரை இங்கிலாந்தில் நடத்த முயற்சி செய்யப்படும் என இங்கிலாந்து கால்பந்து சங்கம் இன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இதற்கான போட்டியில் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு யூரோ தொடரில் இங்கிலாந்து வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டம் நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதாகவும், மிகப்பெரிய ஐரோப்பிய தொடரை நடத்தும் அளவுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இங்கிலாந்து கால்பந்து சங்க தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X