search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொனாகோவின் தியேமௌ பகாயோகோவை ரூ. 337 கோடி கொடுத்து வாங்கியது செல்சியா
    X

    மொனாகோவின் தியேமௌ பகாயோகோவை ரூ. 337 கோடி கொடுத்து வாங்கியது செல்சியா

    மொனாகோவின் நடுகள வீரரான தியேமொள பகாயோகோவை 337 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது பிரிமீயர் லீக் அணியான செல்சியா.
    பிரான்ஸ் கால்பந்து அணியின் நடுகள வீரர் தியேமௌ பகாயோகோ. 22 வயதான இவர் மொனாகோ கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மொனாகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரான லீக் 1-ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இவரது ஆட்டத்தை பார்த்து இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து அணியான செல்சியா விலைக்கு வாங்க முயற்சி செய்தது. இதுகுறித்து மொனாகோ அணியிடம் பேசியது. அப்போது மொனாகோ அணியும் தியேமௌ பகாயோகோவை கொடுக்க சம்மதித்தது.



    இதனால் இரு கிளப்புகளுக்கும் இடையில் தியேமௌ பகாயோகோ டிரான்ஸ்பர் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2017-18 சீசனில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு தியேமௌ பகாயோகோ செல்சியா அணிக்காக விளையாடுவார்.

    தியேமௌ பகாயோகோவிற்கு டிரான்ஸ்பர் பீஸாக 337 கோடி ரூபாய் செல்சியாக அணி மொனாகோவிற்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பிரான்ஸ் தேசிய அணிக்காக இந்த வருடம்தான் அறிமுகமாகியுள்ளார் தியேமௌ பகாயோகோ. இவர் 2013-14-ல் ரெனஸ் அணிக்காகவும், 2014 முதல் 2017 வரை மொனாகோ அணிக்காக விளையாடியுள்ளார்.
    Next Story
    ×