search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான்
    X

    சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான்

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததும் டோனி முகத்தில் அதிக அளவில் ரியாக்சன் இல்லாதது ஏமாற்றம் அளித்தது என பகர் சமான் கூறியுள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. கோப்பையுடன் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அனைத்து மீடியாக்களும் வீரர்களை அழைத்து பேட்டி கண்டு வருகிறது.

    பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகர் சமான். இவர் 106 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் PakPassion.net-ற்கு பேட்டியளித்தார். அப்போது நான் சதம் அடிக்கும்போது டோனி முகத்தில் அதிக அளவில் எந்த ரியாக்சனும் இல்லை. இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.



    மேலும் இதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘நான் சதம் அடித்ததும் டோனியின் முகத்தில் அதிக அளவில் எந்த ரியாக்சனும் இல்லை. இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன். நான் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, கோலி மற்றும் இந்திய வீரர்கள் என்னைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

    ஆகவே, நான் சதம் அடித்ததும், எனக்கு பாராட்டு தெரிவிக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், நான் கோலியை நோக்கும்போது, அவர் கிழே குணிந்து கொண்டிருந்தார். ஆனால், அவர் கைதட்டி பாராட்டினார்’’ என்றார்.
    Next Story
    ×