என் மலர்
செய்திகள்

அஸ்வினை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்
அஸ்வின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று இந்தியாவிற்கு எதிரான நாளைய போட்டி குறித்து டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நாளைய போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டியாகும்.
நாளைய போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பயிற்சி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கூறுகையில், ‘‘அஸ்வின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
மேலும், நாளைய போட்டி குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நாளைய போட்டியில் அஸ்வின் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக நாங்கள் அவர் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
அவர் அணியில் இடம்பெறாமலும் இருக்கலாம். அவர் அணியில் இருப்பதை விரும்புகிறோமா? அல்லது இல்லாததை நாங்கள் விரும்புகிறோமா? என்பதை என்னால் கூற இயலாது.
அஸ்வின் தலைசிறந்த பந்து வீச்சாளர். அவர் எங்களுக்கு எதிராக ஏராளமான விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இந்தியாவில் எங்களுக்கு எதிராக அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியவர். அவர் அணியில் இடம்பிடித்தால், அவருக்கு எதிராக எங்களது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்’’ என்றார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பயிற்சி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கூறுகையில், ‘‘அஸ்வின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
மேலும், நாளைய போட்டி குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நாளைய போட்டியில் அஸ்வின் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக நாங்கள் அவர் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
அவர் அணியில் இடம்பெறாமலும் இருக்கலாம். அவர் அணியில் இருப்பதை விரும்புகிறோமா? அல்லது இல்லாததை நாங்கள் விரும்புகிறோமா? என்பதை என்னால் கூற இயலாது.
அஸ்வின் தலைசிறந்த பந்து வீச்சாளர். அவர் எங்களுக்கு எதிராக ஏராளமான விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இந்தியாவில் எங்களுக்கு எதிராக அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியவர். அவர் அணியில் இடம்பிடித்தால், அவருக்கு எதிராக எங்களது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்’’ என்றார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






