search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
    X

    பயிற்சி ஆட்டம்: இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்தேதி) தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னோட்டமாக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றது.

    முதல் பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    ஒவ்வொரு அணியிலும் 15 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் 11 பேர் பேட்டிங் செய்யலாம். 11 பேர் பீல்டிங் செய்யலாம். பேட்டிங் செய்தவர்கள்தான் பீல்டிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

    இந்திய அணியில் யுவராஜ் சிங் வைரஸ் காய்ச்சல் காரணமாகவும், ரோகித் சர்மா இங்கிலாந்து செல்வதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினாலும் பங்கேற்கவில்லை. மற்ற 13 பேரும் விளையாடுவார்கள்.

    இந்த போட்டிகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டி. பயிற்சி ஆட்டம் என்பதால் முக்கியத்துவமற்ற போட்டியாக கருதக்கூடாது. ரோகித் சர்மா இன்று அணியுடன் வந்து இணைவார். யுவராஜ் சிங் குணமடைந்து வருகிறார். மற்ற 13 பேர் இன்று விளையாட வாய்ப்புள்ளது’’ என்றார்.
    Next Story
    ×