TN Assembly Election| பல்லடம் தொகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
TN Assembly Election| பல்லடம் தொகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?
Published on

பண்ருட்டி :

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. இதற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளதே காரணமாக கூறப்பட்டாலும் அரசியல் களத்தில் முதல் முறையாக களம் இறங்கி உள்ள விஜய் தான் முதன்மையாக கருதப்படுகிறது.

திமுக, அதிமுக-வே ஆண்டால் போதும் என்று ஒரு சாராரும், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் கூறி வரும் நிலையில், விஜயின் அரசியல் வருகை எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

இதற்கு முன்னதாக, பல்வேறு தரப்பினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிலையில் மாலைமலரும் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் Vox Pop கேட்டு வருகிறது.

அந்த வகையில், பல்லடம் தொகுதியில் 40-க்கும் மேற்பட்ட சராசரி பொதுமக்களிடம் Vox Pop நடத்தப்பட்டதில் திமுகவிற்கு 20 பேரும், அதிமுகவிற்கு 8 பேரும், தமிழக வெற்றிக்கழகத்திற்கு 13, நாம் தமிழர் கட்சிக்கு ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதன் முழு விவரம் இதோ...

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com