search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VIP"

    • ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
    • கடவுளை காட்சிப்பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி., பிரேக் தரிசன திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- தமிழகத்தில் பிரபலமாக உள்ள கோவில்களில் விஐபி பிரேக் தரிசனத்துக்காக ஒவ்வொரு மணி நேரமும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும். இறைவன் முன்பாக ஏழை, பணக்காரன் என்று பாகுபடுத்தி கடவுளை காட்சிப்பொருளாக்கும் தரிசன கட்டண முறையை இந்து முன்னணி கடுமையாக எதிா்த்து வருகிறது.

    இது பக்தா்களிடம் பொருளாதார தீண்டாமையை ஏற்படுத்தும் செயலாகும். அதிலும் காா்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, சூரசம்ஹாரம் உள்ளிட்ட விசேஷ நாள்களில் தரிசனக் கட்டணமும் பல மடங்கு ஏற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் ஒரு கால வழிபாடு இல்லாமல் பல ஆயிரம் கோயில்கள் மூடிக்கிடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாமர பக்தா்களின் இறைபக்தியை கேவலப்படுத்தும் விஐபி பிரேக் தரிசன திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும். அதே வேளையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால் ஒவ்வொரு கோயில்களின் முன்பாகவும் பக்தா்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பதியில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
    • நேரம் ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு சில வி.ஐ.பி.க்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருப்பதியில் கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள், மலர்கள், பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏழுமலையான் கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் கோவில் முன்பு கோலாட்டம் ஆடி பக்தர்கள் அசத்தினர்.

    ஜம்மு-காஷ்மீர் கவர்னர், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சினிமா நடிகர், நடிகைகள் என ஏராளமான வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்தனர்.

    ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்ததால் தேவஸ்தான அதிகாரிகளால் அவர்களுக்கு உண்டான நேர ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் ஒரு சில வி.ஐ.பி.க்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கீடு செய்து அனுப்பியதால் இலவச தரிசன பக்தர்கள் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. 

    பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ரத்து செய்யப்படுவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #PakistanAirport #Imrankhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை என்று கூறி ராணுவ செயலாளரின் 3 படுக்கை அறையுடன் கூடிய வீட்டில் தங்கியுள்ளார். தன்னுடன் 2 பணியாளர்களை மட்டுமே உதவிக்கு வைத்திருக்கும் அவர் 2 அரசு கார்களை மட்டுமே பயன்படுத்துகிறார்.

    கவர்னர் மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், ராணுவ தலைமை தளபதி மற்றும் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பு பயணத்துக்கு சமீபத்தில் தடை விதித்தார்.

    இந்த நிலையில், நேற்று மற்றொரு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். பொதுவாக விமான நிலையங்களில் அரசியல் வாதிகள் நீதிபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.


    இனி அவர்களுக்கு விமான நிலையத்தில் அரசு மரியாதை வழங்க கூடாது. மீறி சிறப்பு மரியாதை அளித்தால் விமான நிலைய குடியுரிமை அதிகாரி மற்றும் ஷிப்ட் பொறுப்பு அதிகாரியும் ‘சஸ்பெண்டு’ செய்யப்படுவர் என உள்துறை அமைச்சகம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த தகவலை தகவல் தொடர்பு துறை மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்தார்.

    இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரை முதன் முறையாக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உமர் ஜாவீத் பஜ்வா சந்தித்து பேசினார்.

    அப்போது இருவரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். #PakistanAirport  #Imrankhan
    தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `வேலையில்லா பட்டதாரி' படத்தை காப்பி அடித்துவிட்டதாக தனுஷ் தொடர்ந்த வழக்கில், தனுசுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. #VIP #Dhanush
    தனுஷ் தயாரித்து கதாநாயகனாக நடித்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலையில்லா பட்டதாரி'. தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம், தெலுங்கிலும் `ரகுவரன் பிடெக்' என்ற பெயரில் வெற்றி பெற்றது. 

    இந்த படத்தை ரீமேக் செய்யும் உரிமம் பெறாமல், மராட்டி மொழியில் ’மஹ்ஜா நா சிவாஜி’ என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. காட்சிகள் மட்டும் அல்லாமல் தமிழில் இடம்பெற்ற பாடல்களில் இரண்டையும் காப்பி அடித்து வைத்திருந்தனர். அனுமதி பெறாமல் தனது படத்தை காப்பி அடித்த மராட்டிய தயாரிப்பாளர்கள் பிரனீதா பவார், சக்கரவர்த்தி ஆகியோர் மீது தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்தார். இரண்டு படங்களையும் ஆராய்ந்த ஐகோர்ட்டு, தனுசின் படம் காப்பி அடித்து இருப்பதை உறுதி செய்தது. மஹ்ஜா நா சிவாஜி படத்தின் லாபக்கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் தனுசுக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #VIP #Dhanush

    ×