என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urvashi"

    • மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்- ஊர்வசி
    • விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். இது என்னுடைய 2ஆவது தேசிய விருது- ஜி.வி. பிரகாஷ்

    71ஆவது தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருது வழங்கி கவுரவித்தார்.

    தமிழகத்தைச் சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் வாத்தி பட பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார். விருது பெற்றது குறித்து ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது:-

    எனக்கு வாத்தி பட பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். இது என்னுடைய 2ஆவது தேசிய விருது. ரொம்ப ஹேப்பியாக உள்ளது. சூரரை போற்று படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காக கிடைத்தது. வாத்தி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தனுஷ், படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் எனது நன்றி.

    இவ்வாறு ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார்.

    உள்ளொழுக்கு மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது வாங்கியது தொடர்பாக ஊர்வசி கூறியதாவது:-

    விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். எனக்கு இது 2ஆவது விருது. இரண்டு விருதுகளையும் பெண் ஜனாதிபதியிடம் இருந்து வாங்கியுள்ளேன். இந்தியாவின் உயரிய பதவியில் இருக்கும் இரண்டு பெண் ஜனாதிபதியிடம் இருந்து வாங்கியதை பெருமையாக நினைக்கிறேன். மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்.

    இவ்வாறு ஊர்வசி தெரிவித்தார்.

    ஊர்வசி பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருது வழங்கியுள்ளார்.

    • கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார்.
    • சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் உள்ளொழுக்கு படம் வென்றுள்ளது.

    71ஆவது தேசிய விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஊர்வசிக்கு உள்ளொழுக்கு (மழையாளம்) படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.

    இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.

    நடிகை ஊர்வசி ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார். உள்ளொழுக்கு படம் கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிக்கைக்கான மலையாள சினிமா விருதையும் வென்றுள்ளார்.

    ஊர்வசி ஏற்கனவே அசுவிண்டே அம்மா என்ற படத்திற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார்.

    நடிகை ராணி முகர்ஜி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

    தமிழ் சினிமாவில் பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ். பாஸ்கர் (சிறந்த துணைநடிகர்), ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் விருது பெற்றனர்.

    • எங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை?
    • நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம்.

    2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.

    'உள்ளொழுக்கு' சிறந்த மலையாள படமாக தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் விருதை தேர்வு செய்த குழுவுக்கு (ஜூரி) நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில், 'உள்ளொழுக்கு' படத்துக்காக எனக்கும், 'பூக்காலம்' படத்துக்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகை, நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டன. எங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை?

    'பூக்காலம்' படத்தில் விஜயராகவனுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது நான். காலையில் 'மேக்கப்' போட ஐந்து மணி நேரம், அதை நீக்க நான்கு மணி நேரம். நீங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவள் நான். ஆனால் அந்த தியாகத்தையெல்லாம் செய்து விஜயராகவன் நடித்தார். அவரது சினிமா அனுபவத்தை தேர்வுக்குழு ஆராய்ந்திருக்க வேண்டாமா? அதற்கு ஒரு சிறப்பு விருது கொடுத்திருக்கலாமே? துணை நடிகராக ஏன் தேர்வு செய்யவேண்டும்? நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு தருவதைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என சொல்வது சரியல்ல.

    அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமாக கருத முடியாது. எதற்கும் ஒரு நியாயம் வேண்டாமா?, என்று ஊர்வசி பொங்கியுள்ளார். ஊர்வசிக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    • தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஊர்வசி.
    • ஊர்வசி மற்றும் மனோஜ் கே ஜெயன் தம்பதிக்கு பிறந்தவர் தேஜலட்சுமி.

    தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஊர்வசி. இதுவரை 700 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது நடிப்பில் வெளியான ஜே பேபி, உல்ழொலுக்கு, ஹெர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    ஊர்வசி மற்றும் மனோஜ் கே ஜெயன் தம்பதிக்கு பிறந்தவர் தேஜலக்ஷ்மி. ஆனால் மனோஜுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணத்தினால் கடந்த 2008 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இவர்களுக்கு பிறந்த மகளான தேஜ லக்ஷ்மி தந்தியான மனோஜ் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

    தற்பொழுது தேஜலட்சுமி மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கு `சுந்தரியாயவல் ஸ்டெல்லா' என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ஐகே கே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க. அறிமுக இயக்குநரான பினு பீட்டர் இயக்குகிறார். படத்தின் நாயகனாக சர்ஜனோ காலித் நடிகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவை அனீஷ் மேற்கொள்ள இசையை ஸ்ரீனாத் சிவசங்கரன் இசையமைக்கிறார். படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • 54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில விருதுக்கான பட்டியலை இன்று வெளியானது.
    • ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில திரைப்பட  விருதுக்கான பட்டியலை இன்று திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சார விவகாரதுறை அமைச்சர் சஜி செரியன் இன்று வெளியிட்டார்.

    சிறந்த நடிகருக்கான விருதை பிரித்விராஜ் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

    இந்தாண்டு பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்காக மிக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார் பிரித்விராஜ்.

    இப்படத்திற்காக உடல் எடை குறைத்து , உண்மையில் அந்த பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மனிதனாக நடித்து இருப்பார். திரைப்படம் தற்பொழுது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    சிறந்த நடிகைக்கான விருதை `உள்ளொழுக்கு' படத்திற்காக ஊர்வசியும், தடவு திரைப்படத்திற்காக பீனா ஆர் வென்றுள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன் ஊர்வசி மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளொழுக்கு. மாமியார் மற்றும் மருமகள் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தனர். இப்படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    சிறந்த இயக்குனருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிளெஸ்ஸி வென்றுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் வென்றுள்ளது.

    ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    மற்ற திரைத்துறைக்கான விருதுகளின் பட்டியல்


    சிறப்பு குறிப்பு-அபிநயா கிருஷ்ணன் (ஜெய்வம்) கே ஆர் கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)

    சிறப்பு நடுவர் (நடிப்பு) - கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)

    சிறப்பு ஜூரி படம் - ககனாச்சாரி

    சிறந்த அறிமுக இயக்குனர் - பாசில் ரசாக் (தடவ்)

    பிரபலமான படம் - ஆடுஜீவிதம்

    நடனம் - விஷ்ணு (சுலைகா மன்சில்)

    சிறந்த பெண் டப்பிங் கலைஞர் - சுமங்கலா (ஜனம் 1947 - பிரணயம் துடாருன்னு)

    சிறந்த ஆண் டப்பிங் கலைஞர் - ரோஷன் மேத்யூ (உள்ளொழுக்கு), சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)

    ஒலி வடிவமைப்பு - ஜெயதேவ் சகடத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)

    ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி, சரத் மோகன் (ஆடுஜீவிதம்)

    ஒத்திசைவு ஒலி - ஷமீர் அகமது (ஓ பேபி)

    கலை இயக்கம் - மோகன்தாஸ் (2018)

    எடிட்டிங் - சங்கீதா பிரதாப் (லிட்டில் மிஸ் ராவ்தர்)

    பின்னணிப் பாடகி (பெண்) - ஆனி ஆமி (மங்களப்பூழுக்கும் - பசுவும் அற்புதவிளக்கும்)

    பின்னணிப் பாடகர் (ஆண்) - வித்யாதரன் மாஸ்டர் (பத்திரநானொரு கனவில் - ஜனம் 1947 - பிராணயம் துடருன்னு)

    சிறந்த இரண்டாவது படம் - இரட்டை

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேரளாவில்தான் பெண்கள் அதை துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர்.
    • ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு ஆணுக்கு விருப்பம் ஏற்படுகிறது.

    மலையாள நடிகைகளுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியிலான கசப்பான அனுபவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகை ஊர்வசி கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் 9 வயதில் இருந்து சென்னையில் தான் வளர்ந்தேன். எனது சினிமா வாழ்க்கை தமிழில் இருந்து தான் தொடங்கியது. அடுத்து தெலுங்கு, கன்னடம் என கடைசியாகத்தான் மலையாளத்திற்கு வந்தேன். நான் திரைப்படத்துறைக்குள் வரும்போதே எனக்கு முன்னோடியாக இருந்த சில நடிகைகள் இந்த மாதிரியான பாலியல் தொல்லை பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சனை சினிமா உலகத்தில் புதிதாக இப்போது தோன்றியது அல்ல. ஆனால் தற்போது திரைத்துறையில் உள்ள பெண்களின் பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

    கேரள சினிமாவில்தான் இப்படி அதிகமாக நடக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. வட இந்தியாவில் படிப்பறிவு இல்லாதவர்கள் பெண்கள் மீது நடத்தும் பாலியல் கொடுமையோடு ஒப்பிடும்போது கேரளா முன்னேறித்தான் இருக்கிறது. எல்லா மாநிலத்திலும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன.

    ஆனால் கேரளாவில்தான் பெண்கள் அதை துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர். எதிர்த்து குரல் கொடுத்தனர். இங்கே முற்போக்கான பெண்கள் அதிகம் உள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக வெளிப்படையாக போராடுகின்றனர்.

    தமிழ் சினிமாவிலும் இதே மாதிரியான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால் அதை வெளிப்படையாக பேச யாரும் முன்வரவில்லை. அதனால் அங்கே எதுவுமே நடக்கவில்லை என சொல்ல முடியாது. சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் நூற்றுக்கணக்கான நபர்களுடன் தான் சேர்ந்து வேலை செய்கிறோம். ஆனால் தனிப்பட்ட சந்திப்பின் போதுதான் இப்படியான சீண்டல்கள் நடக்கின்றன. அப்படியென்றால் பெண்கள் சந்திப்பை பொது இடத்தில் நடத்த வேண்டும்.

    ஒரு ஓட்டல், ரெஸ்டாரண்ட், காபி ஷாப் போன்ற இடங்களில் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ வர முடியாது என சொல்ல வேண்டும். அதை ஒரு விதிமுறையாகவே சினிமா சார்ந்த சங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி மீறி தனிப்பட்ட சந்திப்பு நடந்தால், அதற்கு சங்கம் பொறுப்பு அல்ல என சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால், யாரும் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைக்க மாட்டார்கள்.

    நாம் ஒரு பொதுவான விதியைத்தான் உருவாக்க முடியும். யார் நல்லவர்? யார் கெட்டவர்? என தேடிப்பார்த்து சட்டம் வகுக்க முடியாது. ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்து விட்டார் என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. அது விசாரிக்கப்பட வேண்டும். சிலர் ஒருவரின் நன்மதிப்பைக் கெடுக்கவும் கூட பொய்யான புகாரை அளிக்கலாம். எனவே எந்த விஷயமாக இருந்தாலும் விசாரணை தேவை. அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் விசாரணை முக்கியம்.

    ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு ஆணுக்கு விருப்பம் ஏற்படுகிறது. அவளது விருப்பத்தைக் கேட்பதில் தவறில்லை. உடனே அதையே பாலியல் சீண்டல் என சொல்லக்கூடாது. அந்த ஆண் அதையே ஒரு தொழிலாக வைத்து பலரை பின் தொடர்வது தவறானது. பெண் மீது தாக்குதல் நடத்துவது குற்றம். இதனால் ஒரு தொழிலே முடக்கப்படுகிறது என்றால் தான் அது பிரச்சனை. அப்போது தான் பெண்கள் புகார் அளிக்கிறார்கள். அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிஜின் ஜோஸ்.
    • இவர் தற்போழுது ஹெர் {Her} என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிஜின் ஜோஸ். இவர் ஃபரைடே, லா பாயிண்ட் மற்றும் சேரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார். இவர் தற்போழுது ஹெர் {Her} என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படம் இரண்டு வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நேரடி ஓடிடி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படம் பிரபல ஓடிடி தளமான மனோரமா மாக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

    இப்படம் 5 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. படத்தின் கதையை அர்ச்சனா வாசுதேவ் எழுதியுள்ளார். இப்படத்தில் ஊர்வசி, ஐஷ்வர்யா ராஜேஷ், பார்வதி திருவோத்து, லிஜோமோல் ஜோஸ் மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

    படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×