search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Status"

    • அணைக்கு வினாடிக்கு 1397 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
    • காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.68 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1397 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் வாய்க்காலுக்கு வினாடிக்கு 4145 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 211 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.60 அடியாக சரிந்தது.

    ஈரோடு, 

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.60 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 188 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

    ×