என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rail Project"
- அருப்புக்கோட்டை வழித்தடத்தில் மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை தெற்கு ரெயில்வே கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர், விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் திட்டத்தை கைவிடக்கூடாது என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாஜனதா மாநில தலைவர் அண்ணா மலை விருதுநகர் வந்தபோது அந்த திட்டம் நிறைவேற்றப் படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலர் பணீந்திர ரெட்டி விருதுநகர், மதுரை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு விருதுநகர் மாவட்டம் காரி யாபட்டி, அருப்புக்கோட்டை பகுதிகளில் 77 எக்டேர், மதுரை மாவட்டம் கள்ளிக் குடி, திருப்பரங்குன்றம், நிலையூர் பகுதிகளில் 15 எக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விருதுநகர் மாவட் டத்தில் 52 வருவாய்த்துறை அலுவலர்கள், தனி தாசில்தார்கள், மதுரை மாவட்டத்தில் 26 வரு வாய்த்துறை அலுவலர்கள், தனிதாசில்தார்கள் உள்பட 78 பேர் நியமனம் செய் யப்பட உள்ளனர். இவர்க ளுக்கான ஊதியம் மற்றும் இதர செலவினங்களை தெற்கு ரெயில்வே தமிழக அரசுக்கு வழங்கும்.
எனவே இந்த திட்டத் திற்கான நடவடிக்கைகளை உடனடியாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய திட்டத்தை அனைத்து தரப்பினரும் மத்திய, மாநில அரசுக்கும், ரெயில்வேக்கும் கோரிக்கை வைக்க வேண்டும்.
- ரெயில்பாதை குறித்தும், திண்டிவனம் புதுவை ரெயில் பாதை குறித்தும் விளக்கம் கேட்டிருந்தோம்.
புதுச்சேரி:
புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி குப்தா தலைமையில் கடந்த 6-ம் தேதி புதுவை கவர்னரை சந்தித்தனர். புதுவை ரெயில்நிலைய மேம்பாடு, சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் வரை ரெயில் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த ரெயில்பாதை குறித்தும், திண்டிவனம் புதுவை ரெயில் பாதை குறித்தும் விளக்கம் கேட்டிருந்தோம்.
ரெயில்வே நிர்வாகம் அனுப்பிய பதிலில், கிழக்கு கடற்கரை சாலை ரெயில்பாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. திண்டிவனம் நகரி, புதுவை ரெயில்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மறு ஆய்வு செய்து புதிய திட்டத்துக்கு கணக்கெடுப்பு நடத்துவதாக கூறியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு திண்டிவனம், புதுவை, கடலூர் புதிய ரெயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புதிய திட்டத்தை அனைத்து தரப்பினரும் மத்திய, மாநில அரசுக்கும், ரெயில்வேக்கும் கோரிக்கை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்