என் மலர்
நீங்கள் தேடியது "Rahul Gandh"
- கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
- அவர்களுக்கு உண்மை தெரியும், நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் புள்ளிவிவரங்களுடன் அவர் இதை விளக்கினார். மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இடையே 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ராகுலுக்கு கடிதம் அனுப்பிய கர்நாடக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி, கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பற்றிய விவரங்களை பகிரும்படியும், அதில் கையெழுத்திட்டு, எழுத்துப்பூர்வ உறுதிமொழி தரும்படியும் கேட்டு கடிதம் எழுதினார். மகாராஷ்டிரா தேர்தல் ஆணைய அதிகாரி கடிதம் எழுதினார்.
இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்க முடியும் என்று கடிதத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் பதிலளித்துள்ளார். அதாவது, 'நான் காட்டியவை எங்களுடைய தரவுகள் அல்ல, தேர்தல் ஆணையத்தின் தரவுகள். சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த தரவுகளை அவர்கள் மறுக்காமல், என்னிடம் உறுதிமொழி கேட்கின்றனர்.
தவறு என்றால் தவறு என சொல்ல வேண்டியதுதானே. அவர்களுக்கு உண்மை தெரியும், நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.
- ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது
- தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று மதியம் டெல்லியில் இதுதொடர்பான சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
அதில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.
அப்போது, மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இடையே 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில், கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பற்றிய விவரங்களை பகிரும்படியும், அதில் கையெழுத்திட்டு, எழுத்துப்பூர்வ அறிக்கையை தரும்படியும் கேட்டுக்கொள்ளபட்டது.
இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கனிமொழி நோட்டீஸ்.
- பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கியது.
அதானி குழும விவகாரம், உ.பி. கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, சபைக்கு அதன் சொந்த மரியாதை, உயர்தரம், கண்ணியம் உள்ளது. அவற்றை யாரும் தாழ்த்த முயற்சிக்க வேண்டாம். நாம் அனை வரும் சபையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்.
ஆனால் சில நாட்களாக நல்லதல்லாத சில விஷயங்கள் நடந்ததை நான் கண்டேன். இந்த சம்பவங்களில் மூத்த தலைவர்கள் கூட பங்கேற்றது கவனிக்கத்தக்கது, இது நல்லதல்ல என்றார்.
பின்னர் கேள்வி நேரத்தை பிர்லா தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை எழுப்ப முற்பட்டனர்.
அவர்களிடம் சபாநாயகர் சபையை சாதாரணமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதேபோல் மேல்-சபை இன்று கூடியதும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். இரு தரப்பு எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பியதால் கூச்சல்-குழுப்பம் நிலவியது. இதனால் மேல்-சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
இந்த நிலையில் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக குறித்து பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. பாராளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூரும் நோட்டீஸ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று காலை பாராளுமன்றத்தின் பிரதான குழு அறையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்தது.
இதில் பிரியங்கா காந்தி உள்பட எம்.பிக்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் காங்கிரஸ் எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி, அதானி ஒன்றாக இருக்கும் புகைப்படம் பொறித்த பையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் அதானி விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராகவும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், மாநிலங்களவையில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும், மக்களவையில் உள்ள சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பல கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.
ராகுல் காந்திக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் மக்களின் வலி மற்றும் பிரச்சனைகளை அவரால் உணர முடியவில்லை. ஆனால் அதை மற்ற எம்.பி.க்கள் உணருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
- தெற்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் நடந்தது
திருப்பரங்குன்றம்,
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா மதுரையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட காங்கி ரஸ் கட்சி சார்பில் துணைத் தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.வி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். பகுதி தலைவர் நாகேஸ்வரன், அமைப்பு சாரா தொழிலாளர் பணியாளர் பிரிவு மாவட்ட தலைவர் பொன். மகாலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சரவண பகவான், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பூபதி பாண்டியன், ராமகிருஷ்ணன், சீனிவாசன், செல்வராஜ், சின்ன தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






