search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nazriya Nazim"

    எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன், தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். #Thala59 #PinkRemake #VidyaBalan
    விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு.

    முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனிடம் பேசப்பட்டது. ஆனால் அந்தப் படத்தை ரீமேக் செய்து அதன் தரத்தை குறைத்துவிடக் கூடாது என அதில் நடிக்க மறுத்தார்.



    தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் எவ்வாறு நடிக்கச் சம்மதித்தேன் என்பதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “இந்தப் படத்தில் நான் சிறிய வேடத்தில் நடிக்கிறேன். போனி கபூர் தயாரிக்கிறார். அவர்தான் சிறப்பு தோற்றம் தான் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உங்களுக்காக நடிக்கச் சம்மதிக்கிறேன் என்றேன். எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே நடிக்கிறேன்” என்று வித்யா பாலன் கூறியுள்ளார். #Thala59 #AjithKumar #PinkRemake #VidyaBalan

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க இந்திய சினிமாவில் முக்கிய நடிகையும், தேசிய விருது வென்றவருமான வித்யாபாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thala59 #AjithKumar
    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    இந்த படத்தில் 3 கதாநாயகிகளில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கல்யாணி பிரியதர்‌ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    மேலும் தேசிய விருது வென்ற நடிகை வித்யா பாலனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் பதிப்புக்கு ஏற்ப எச்.வினோத் திரைக்கதையை மாற்றி அமைத்திருப்பதால், வித்யா பாலனுக்கு முக்கிய வேடம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. #Thala59 #AjithKumar #HVinoth #VidyaBalan #Nazriya #ShraddhaSrinath #YuvanShankarRaja

    அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியாவதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar
    நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்திருந்தார்.

    பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா, சினிமாவில் இருந்து விலகினார். சமீபத்தில் மீண்டும் படத் தயாரிப்பின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நஸ்ரியா, கடைசியாக பிரித்விராஜ் ஜோடியாக கூடே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இரு படங்களை தயாரித்து வருகிறார்.

    திருமணத்திற்கு பிறகு, அவருக்கு ஏற்ற கதை அமைந்தால் நஸ்ரியா நடிப்பார் என்று பகத் பாசில் கூறியிருப்பதால், சரியான கதைக்காக நஸ்ரியா காத்திருப்பதாக தகவல் வெளியானது.



    இந்த நிலையில், கடந்த வாரம் நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரப் போவதாகவும், முக்கிய அறிவிப்பு ஒன்று, விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார். நடிகை நஸ்ரியா தான் அஜித்தின் தீவிர ரசிகை என்றும், அவருடன் நடிக்க கிடைக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் பலமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில், உங்களின் அடுத்த படம் உங்களுக்கு பிடித்த நடிகருடனா என்று கேட்டதற்கு, இருக்கலாம் என்று ஸ்மைலியுடன் கூறியிருக்கிறார்.

    அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித் படத்தில் நஸ்ரியா நடிக்கும் பட்சத்தில், அது அவருக்கு ஒரு சரியான ரீ-என்ட்ரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. #Thala59 #AjithKumar #NazriyaNazim

    மலையாள நடிகரை திருமணம் செய்துக் கொண்ட நஸ்ரியா, மீண்டும் படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Nazriya
    திருமணத்துக்கு பின் நடிக்க வரும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார் நஸ்ரியா. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    பெங்களூரு டேஸ் படப்பிடிப்பில் இருந்தபோது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போதே அந்த படத்தின் இயக்குனர் அஞ்சலி, பகத் பாசிலிடம் நஸ்ரியா தொடர்ந்து நடிப்பாரா? என்று கேட்டதற்கு அது அவருடைய விருப்பம் தான். நான் தலையிட மாட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். உங்கள் அடுத்த படத்திலேயே வேண்டுமானால் நடிக்க வையுங்கள் என்று விளையாட்டாக கூறி இருக்கிறார்.

    ஆனால் அது உண்மையாகி போனது. அஞ்சலி மூன்று ஆண்டுகள் கழித்து இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து நடிக்க கதைகளும் கேட்டு வருகிறார்.
    ×