என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national emergency"

    • வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
    • இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    இந்தியாவின் மேற்கு மற்றம் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. பீகார், ராஜஸ்தான், உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் சுருண்டு உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி அனூப் குமார் தாந்த் தாமாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்ற நிலையில், வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், வெப்ப அலையில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். மாநில முதன்மை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை மற்றும் குளிர் காற்றுக்கு பலியாவது அதிகரித்திருக்கும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இது தொடர்பான பணிகளில் இறங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது.
    • காற்று மாசுவில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு தேசிய அவசரநிலை என்றும் தீர்க்கமான நடவடிக்கை தேவை எனவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வட இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது ஒரு தேசிய அவசரநிலை - இந்த பொது சுகாதார நெருக்கடி நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் திருடி, முதியவர்களை மூச்சுத் திணறச் செய்யும் , சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பேரழிவு எண்ணற்ற உயிர்களை கொல்லும்.

    நம்மில் உள்ள ஏழ்மையானவர்கள் தங்களைச் சுற்றியுள்ள நச்சுக் காற்றிலிருந்து தப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். சுத்தமான காற்றுக்காக மூச்சுத் திணறுகின்றனர். குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள், மில்லியன் கணக்கான உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சுற்றுலா வீழ்ச்சியடைந்து, நமது உலகளாவிய நற்பெயர் சிதைந்து வருகிறது.

    மாசு மேகம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களை உள்ளடக்கியது. அதை சுத்தம் செய்ய அரசாங்கங்கள், நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் குடிமக்களிடம் இருந்து பெரிய மாற்றங்கள் மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவைப்படும். எங்களுக்கு ஒரு கூட்டு தேசிய பதில் தேவை, அரசியல் பழி விளையாட்டுகள் அல்ல.

    இன்னும் சில நாட்களில் பார்லிமென்ட் கூடும் என்பதால், எம்.பி.க்கள் அனைவருக்கும், நெருக்கடியான நம் கண்கள் எரிச்சல் மற்றும் தொண்டை வலி நினைவுக்கு வரும். இந்த நெருக்கடியை இந்தியா எப்படி ஒருமுறை முடிவுக்கு கொண்டுவருவது என்று ஒன்று கூடி விவாதிப்பது நமது பொறுப்பு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க டொனால்டு டிரம்ப் முடிவு.
    • அவசர நிலையை கொண்டுவரவும் தயங்க மாட்டேன்.

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்ததும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 100 முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி நாடு முழுக்க சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதற்கான கையெழுத்தை டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே போட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் தேவைப்பட்டால் தேசிய அவசர நிலையை கொண்டுவரவும் தயங்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

    அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும், எல்லை சுவரை கட்டுவதற்கும் கூடுதல் படைகளை அப்பகுதியில் குவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கும், ஏற்கனவே சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தவும் கடும் நடவடிக்கை எடுப்பதாக கூறியே டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், நாடு கடத்தலை அதிகப்படுத்துவது தொடர்பாக டிரம்ப் பத்து நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்க இருக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    சட்டப்பூர்வ குடியிரிமை இல்லாத பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமையை முடிவுக்கு கொண்டுவரும் உத்தரவை பிறப்பித்து சட்டப்பூர்வ குடியேற்றத்தை நிறுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அகதிகள் திட்டத்தை குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • நிர்வாக வசதிக்காக தேசிய அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 937 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை தெரிவித்துள்ளது.

    பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன.

    இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக வசதிக்காக அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.

    தகவல் தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவில் அவசர நிலையை ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்தார்.
    வாஷிங்டன்:

    சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

    அத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5-ம் தலைமுறை செல்போன் ‘நெட்வொர்க்’ (5ஜி) சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

    இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்து, ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

    இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். அதில், எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்ற போதிலும், சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை குறிவைத்துத்தான் இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகளில் தீவிரமாக அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

    இந்த நெருக்கடி நிலையால் வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்வது தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில், நெருக்கடி நிலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் ஹூவாய் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்தது.

    இதன் மூலம், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெறாமல், ஹூவாய் நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
    ×