search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Filing of Nominations"

    • தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது.
    • வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக நடக்கும் ஏப்ரல் 26-ந்தேதி, கேரள மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 20 மக்களவை தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறும் எனவும், வருகிற 29, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய பொது விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்த அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் நாளான இன்று ஒரு சிலர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.

    வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந்தேதி நடைபெறுகிறது. அங்கு வேட்பு மனுக்களை வாபஸ் பெற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்படும்.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே வேட்புமனு பெற வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

    வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை ஊதியம் பொருந்தும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவ னங்கள் மற்றும்வணிக மையங்களுக்கு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது.

    • தென் சென்னையில் 19 பேரும், மத்திய சென்னையில் 10 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
    • தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் 3 தொகுதி களுக்கான வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. 20-ந் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் நேற்று வரை அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உற்சாகமாக மனு தாக்கல் செய்தனர்.

    பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனு தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்பதால் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி வரிசையாக அழைக்கப்பட்டனர்.

    நேற்று நல்லநாளாக இருந்ததால் அரசியல் கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 3 தொகுதிகளிலும் சேர்த்து 52 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வடசென்னையில் தான் அதிகபட்சமாக 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தென் சென்னையில் 19 பேரும், மத்திய சென்னையில் 10 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் 21 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 16 பேரும், சுயேச்சைகள் 15 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வது முடி வடைவதால் இன்றும் நாளையும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று மாலைக்குள் வேட்பு மனு செய்வோரின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறுவதை தொடர்ந்து சென்னையில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    ×