search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Flood"

    • யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் டெல்லியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. நேற்று காலை யமுனையில் 205.96 மீட்டர் அளவாக இருந்த நீர்மட்டம் இரவு 9 மணி அளவில் 206.42 மீட்டராக உயர்ந்தது.

    இன்று காலை இது 206.56 மீட்டர் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    யமுனையில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கரையோரம் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். டெல்லியில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.
    • வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

    டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழை குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    சில கும்பங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

    மேலும், உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

    யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மழை வெள்ளம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • யமுனை ஆற்றில் பழைய கால படங்கள் மற்றும் ஓவியங்களையும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    டெல்லி மற்றும் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் டெல்லியில் வி.ஐ.பி. பகுதிகள் உள்பட அனைத்து இடங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    இந்த மழை வெள்ளம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது யமுனா தனது இடத்தை மீட்டெடுக்கிறது என்ற தலைப்பில் யமுனை ஆற்றின் பழைய புகைப்படங்களையும், தற்போது வெள்ளம் பாய்ந்தோடும் பகுதிகளையும் பதிவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் ஒரு காலத்தில் செங்கோட்டையின் பின்புற சுவருக்கு அருகில் யமுனா நதி எவ்வாறு பாய்ந்து செல்கிறது என்பதை காண முடிகிறது.

    மேலும் யமுனை ஆற்றில் பழைய கால படங்கள் மற்றும் ஓவியங்களையும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்நதுளள்து. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, கான் மார்க்கெட், தீன் மூர்த்தி ரவுண்ட்-அபவுட், ஜிஜிஆர்-பிடிஆர், ஏ-பாயிண்ட் டு டபிள்யூ-பாயிண்ட், கம்லா எக்ஸ்பிரஸ் பில்டிங், ஆண்ட்ரூஸ் கஞ்ச், கான்பூர் டி-பாயின்ட், பைரன் மார்க் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள வழித்தடம் உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கும்படி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.

    • டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது.
    • யமுனை ஆற்றின் நீர்மட்டம், தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்துள்ளது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மேலும், டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுடெல்லியில் 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த யமுனை ஆற்றின் நீர்மட்டம், தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்திருக்கிறது.

    இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் யு.ஏ.இ. சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

    அப்போது டெல்லி வெள்ள நிலவரம் குறித்தும், அபாயம் நிலைமையைத் தணிப்பதற்கான முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும், மத்திய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்போடு டெல்லி மக்களின் நலன் கருதி சாத்தியமான அனைத்து வேலைகளையும் செய்ய வலியுறுத்தியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    • யமுனை ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்ததால் டெல்லி நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது
    • தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், மீண்டும் கனமழை மிரட்டி வருவதால் வெள்ள அபாயம் நீங்கவில்லை

    கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுடெல்லியில் 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த யமுனை ஆற்றின் நீர்மட்டம் தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்திருக்கிறது. இருப்பினும் மக்களை செல்பி எடுக்கவோ அல்லது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குளிக்கவோ வேண்டாம் என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

    நேற்று வடமேற்கு டெல்லியின் முகுந்த்பூர் சௌக் பகுதியில் வெள்ளத்தால் தேங்கிய நீரில் குளித்த 3 சிறுவர்கள், பள்ளத்தில் மூழ்கி இறந்தனர். இந்த செய்தி வந்த ஒரு நாளுக்குப் பிறகு முதல்வரின் வேண்டுகோள் வந்திருக்கிறது.

    அவர் டுவீட் செய்திருப்பதாவது:-

    சிலர் விளையாடவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ வெள்ள நீரில் செல்வதாக பல இடங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. தயவு செய்து இதை செய்யாதீர்கள். நீங்கள் உயிரிழக்க நேரிடும். வெள்ள அபாயம் இன்னும் தீரவில்லை. தண்ணீர் ஓட்டம் மிகவும் வலிமையானது. நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    சாந்திவன் பகுதியில் குழந்தைகள் வெள்ளத்தில் விளையாடும் ஒரு வீடியோவை இணைத்து பதிவிட்ட கெஜ்ரிவால், "இதுபோன்ற செயல்களை தவிர்க்கவும்" என அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பல நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, நகரின் யமுனை நதியில் நீர்மட்டம் ஆபாய கட்டத்தை தாண்டியது. இதனால் புதுடெல்லியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 208.66 மீட்டராக இருந்த நீர்மட்டம், இன்று காலை 10 மணியளவில் 207.48 மீட்டராக குறைந்துள்ளது. இருப்பினும் அபாய கட்ட அளவை (205.33 மீட்டர்) தாண்டி 2 மீட்டருக்கு மேல் உயர்ந்தது.

    இந்திர பிரஸ்தா பகுதி ரெகுலேட்டரில் (வடிகால் சீராக்கும் கருவி) ஏற்பட்ட உடைப்பினால், நகரின் ஐடிஓ (ITO) அருகே உள்ள பகுதி மற்றும் ரிங் ரோடு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாந்திவனில் இருந்து கீதா காலனி வரையிலான ரிங் சாலையின் இரு பாதைகளிலும் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் இதர இலகு ரக வாகனங்கள் செல்ல டெல்லி போக்குவரத்து காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், சாந்திவனில் இருந்து ராஜ்காட் மற்றும் ஐஎச்பிடி (ISBT) நோக்கி செல்லும் சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அரியானாவின் அத்னிகுண்ட் தடுப்பணைக்கு வந்தது. அந்த தண்ணீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் டெல்லி நகருக்குள் புகுந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் மார்பளவு தேங்கி உள்ளது.

    இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு உதவவும் 4500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய பலர் உணவு இல்லாமல் பட்டினியில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள், மீட்பு படையினர் உதவி வருகின்றனர்.

    இந்தநிலையில் கனமழை ஓய்ந்ததால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    • யமுனை ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் டெல்லி நகரில் வெள்ளம் புகுந்தது
    • டெல்லியின் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொது சேவைகள் ஸ்தம்பித்தன

    வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. குறிப்பாக டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா மாநிலங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

    யமுனை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. அரியானா மாநிலத்தில் யமுனை ஆற்றில் கட்டப்பட்டுள்ளது ஹத்னிகுண்ட். அதிக நீர்வரத்தால் ஹத்னிகுண்ட் தடுப்பணை திறந்து விடப்பட்டது.

    டெல்லியில் மழை குறைந்த நிலையிலும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெல்லியில் பெரும்பாலான பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து உள்ளிட்ட பொதுசேவைகள் ஸ்தம்பித்தன.

    முக்கியமான சாலைகளில் நீர் ஓடியதால் பெரும் ஆபத்தான நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளது. நீர் வடிந்து சகஜ நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு இடையே டெல்லியின் முக்கிய பகுதிகள் உள்ள நீரை சுத்திகரித்து செய்து யமுனை ஆற்றுக்கு கொண்டு செல்லும் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதால், யமுனை ஆற்றின் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. தற்போது அந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரியானை அரசை பயன்படுத்தி பா.ஜதனா டெல்லியில ஒரு சில இடங்களை மூழ்கடிக்க வேண்டுமென்றே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

    ஆனால், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு தவறானவை. ஒரு லட்சம் கனஅடிக்கும் அதகமாக நீர்வரத்து இருக்கும்போது, யமுனை ஆற்றின் மற்ற இடத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலாது என அரியானா அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தகவல் மற்றும் பொது தொடர்பு துறை சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மத்திய நீர் ஆணையம் வழிகாட்டு நெறிமுறையின்படி ஒரு லட்சத்திற்கும் அதிகமான கனஅடி நீர் வருகையின்போது மேற்கு யமுனை அல்லது கிழக்கு யமுனை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட முடியாது.

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அரியானா முதல்வரின் நீர்ப்பாசனத்திற்கான ஆலோசகர் தேவேந்திர சிங், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் ஒரு லட்சத்திற்கும் அதிக கனஅடி தண்ணீர் வரும்போது, பெரிய பாறைகள் காரணமாக மேற்கு யமுனை மற்றும் கிழக்கு யமுனை கால்வாயில் தண்ணீரை வெளியேற்ற முடியாது எனத் தெரிவித்தார்.

    அது தடுப்பணையின் கட்டமைப்பை சேதப்படுத்தலாம். ஆகவே, கால்வாய்களுக்கான முதன்மை ரெகுலேட்டர் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. பக்கவாட்டு ரெகுலேட்டர் வாயில்கள் திறக்கப்பட்டு தண்ணீர் யமுனை ஆற்றில் விடப்பட்டன.'' எனத் தெரிவித்துள்ளது.

    • மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்தனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    வடமாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது.

    டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியின் முகுந்த்பூரில் தேங்கி இருந்த வெள்ள நீரில் குளித்த மூன்று சிறுவர்கள் அதில் மூழ்கி உயிரிழந்தனர்.

    டெல்லி முகுந்த்பூரில் உள்ள மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்த சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்த சிறுவர்கள் பியூஷ் (13), நிகில் (10), ஆஷிஷ் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது.
    • உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

    இமாச்சலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய தண்ணீர் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து யமுனா நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

    குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. ஏற்கனவே டெல்லியில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் யமுனா நதி வெள்ளமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கார், பஸ் என பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் அணைகள் மூடப்பட்டன. இதனால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    தொடர் கன மழை காரணமாக யமுனா ஆற்றின் நீர் மட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயந்ந்தது. நேற்று பகல் 1 மணிக்கு 208.62 மீட்டராக அதிகரித்தது. ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி சென்றதால் பெரும் வெள்ளம் டெல்லிக்குள் புகுந்தது.

    இந்த நிலையில் யமுனா ஆற்றுக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆற்றின் நீர் மட்டம் 208.62 மீட்டர் அளவிலேயே இருந்தது. நீர் மட்டம் உயராததால் இனிமேல் குறைய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து மத்திய நீர் ஆணைய இயக்குனர் ஷரத் சந்திரா கூறும்போது, அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 4 மணிக்கு 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. யமுனா ஆற்றில் நீர் மட்டம் சீராகி விட்டது. இன்று ஆற்றின் நீர் மட்டம் 208.45 மீட்டராக குறையும் என்று எதிர் பார்க்கப்படு கிறது என்றார்.

    யமுனா ஆற்றின் நீர் மட்டம் நேற்று இரவு நிலையான அளவு வந்து குறைய தொடங்கி இருந்தாலும் அபாய கட்டத்தை விட மூன்று மீட்டர் உயரத்தில் தண்ணீர் இன்னும் பாய்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி சென்ற தண்ணீரின் அளவு குறைய தொடங்கியுள்ளதால் டெல்லியில் வெள்ளம் வடிகிறது.

    அதே வேளையில் டெல்லி முழுவதும் வெள்ள காடாக இருப்பதால் தண்ணீர் வடிய சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் நாளை மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வட மாநிலங்களில் கன மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றுக்கு மேலும் 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 17 பேர் பலியானார்கள். இமாச்சலபிரதே சத்தில் 6 பேர், அரியானாவில் 5 பேர் பஞ்சாப்பில் 4 பேர், உத்தரகாண்ட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

    ஒட்டு மொத்தமாக வட மாநிலங்களில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இதில் இமாசல பிரதேசத்தில் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தும் இமாசலபிரதேச மாநிலத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அங்கு லஹவுல் ஸ்பிதி மற்றும் கின்னார் மாவட்டங்களில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் 1000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரியானா தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரால் டெல்லிக்கு ஆபத்து
    • இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் வெள்ளம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது.

    இன்றும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்யும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. என்றாலும், யமுனை ஆற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர்மட்டம் 208.46 மீட்டரை தாண்டியுள்ளது. காலை ஆறு மணிக்கு 208.41 மீட்டராக இருந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் மேலும் அதிகரித்துள்ளது.

    இதனால் டெல்லியின் தாழ்வான பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிவில் லைன் ஏரியாவில் ரிங் சாலை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. மஞ்சு கா திலாவை ஜம்மு காஷ்மீர் கேட் உடன் இணைக்கும் பகுதி மூடப்பட்டுள்ளது. இந்த இடம் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. அதேபோல் டெல்லி மாநில சட்டமன்றம் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ளது.

    மழை நின்ற பின்னரும், டெல்லிக்கு ஏன் இந்த ஆபத்து? என்ற கேள்வி எழுந்துள்ளது. யமுனை ஆறு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியதாகும்.

    இந்தப் பகுதியில் மழை பெய்தால் வெள்ளம் யமுனை ஆற்றுக்கு வந்து சேரும். தற்போது உத்தரகாண்ட், இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கிருந்து வெள்ளம் யமுனை ஆற்றில் கலக்கிறது. இதன் காரணமாக அரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து நீர் திறந்து விடப்படுவதை தடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு, அரியானா தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. உபரி நீர்தான் தடுப்பணையில் இருந்து வெளியேறுகிறது என பதில் அளித்துள்ளது.

    இன்று மதியம் 2 மணியில் இருந்து தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் யமுனை ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் பாதுப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளர்.

    இதுவரை இல்லாத அளவிற்கு யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. டெல்லி வரலாறு காணாத மழையை பெற்றுள்ளது.

    • யமுனை ஆற்றில் 1978-ம் ஆண்டுடிற்குப்பிறகு நீர்மட்டம் 207.49 மீட்டரை தாண்டியுள்ளது
    • ஹரியானா தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்க வலியுறுத்துமாறு அமித் ஷாவுக்கு கடிதம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, அரியானா உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் கனமழையால் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

    ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்தினிகுண்ட் தடுப்பணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாவல், யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக டெல்லி யமுனை ஆற்றில் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக 205 மீட்டரை தாண்டிய வண்ணம் உள்ளது. 206 மீட்டரை தொட்டாலே அபாயம் கட்டத்தை தாண்டியதாகும். ஆனால் நேற்றிரவு 208.08 மீட்டரை எட்டியது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஆக்கிரிமிக்க தொடங்கியுள்ளது.

    கடந்த 1978-ம் ஆண்டு நீர்மட்டம் 207.49 மீட்டருக்கு உயர்ந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது 45 வருடங்கள் கழித்து 208.08 மீட்டரை தாண்டியுள்ளது. மேலும், டெல்லியில் 208.08 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்தது இதுவே முதல்முறையாகும்.

    அபாயகரமான சூழ்நிலை நிலவுவதால், மக்கள் காத்திருக்க வேண்டாம். கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பள்ளிகளை தற்காலிக முகாமாக மாற்ற கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், அரியானாவின் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தண்ணீரை குறைத்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

    டெல்லியில் வெள்ளம் என்ற செய்தி உலகத்திற்கு அனுப்பும் நல்ல தகவலாக இருக்காது. நாம் அனைவரும் இணைந்து டெல்லி மக்களை இந்த சூழ்நிலை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஜி-20 மாநாட்டிற்கு டெல்லி தயாராகி வரும் நிலையில் இந்த கருத்து வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லி 1924, 1977, 1978, 1995, 2010 மற்றும் 2013 ஆகிய வருடங்களில் வெள்ளத்தை சந்தித்துள்ளது.

    ×