search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avin"

    • ஆவணங்களை திருத்தியது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
    • முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2019-20ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய இடங்களிலும் ஆவினில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பலருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்படவில்லை.

    "முறையாக விண்ணப்பிக்காத பலர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தியதாகவும்" ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் குழு மதுரை, தேனி, திருப்பூர் நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்

    இந்த விசாரணையின்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் குழு ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கியது.

    இந்த அறிக்கையை பரிசீலித்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.

    இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையடுத்து, பணி இடம் நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இந்த சம்பவத்தில் ஆவணங்களை திருத்தியது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், முறைகேடு தொடர்பாக உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கலாம்.
    • ஓய்வூதியதாரர்கள் வயதான காலத்தில் அலையக்கூடாது என்பதற்காக புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆவின் பால் நிறுவனத்தில் 4500 ஓய்வூதியதாரர்களும் 3500 குடும்ப ஓய்வூதியதாரர்களும் மொத்தம் 8 ஆயிரம் பேர் உள்ளனர். இதுநாள் வரையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழ் வருடத்திற்கு ஒரு முறை நேரில் சென்று புதுப்பிக்க வேண்டும்.

    இந்த நடைமுறை தற்போது மாற்றம் செய்யப்பட்டு வீட்டில் இருந்தபடியே தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் புதிய திட்டம் இந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா கூறியதாவது:

    ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்க இனிமேல் ஆவின் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை. தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்தவாறே செல்போன் மூலமாக வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்கும் டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வயதான காலத்தில் அலையக்கூடாது என்பதற்காக இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 8 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
    • பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் ஒன்றியத்தில் ஆவின் முகவராக தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இது குறித்து ஆவின் பொது மேலாளா் எ.பி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் ஒன்றியத்தில் 431 கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 2.05 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு 34 ஆயிரம் லிட்டா் பால் பாக்கெட்டாக உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதில், மீதமுள்ள பால் கோவை, ஈரோடு மற்றும் சென்னை இணையத்துக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர் ஒன்றியத்தின் மூலம் பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பன்னீர், டெட்ரா மில்க், டிலைட் பால் மற்றும் குலோப் ஜாம் மிக்ஸ் போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆகவே விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வீரபாண்டி பிரிவிலுள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி முகவர் விண்ணப்பம் பெற்று முகவராக நியமனம் பெற்று பயனடையலாம். மேலும் சரண்யா ,மேலாளர்(விற்பனை) 9080294484, டாக்டர் சுரேஷ், மேலாளர்(விற்பனை) 9865254885 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என ஆவின் பொதுமேலாளர் எ.பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

    ×