என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2025 budget presentation"

    • நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.
    • பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    டெல்லி:

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. இதனால் பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளார். 63 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்தை மாற்றுவதற்கான புதிய சட்ட விதிகள் குறித்து நிபுணர்கள் குழு தீவிர ஆய்வு செய்துள்ளனர்.

    வரி செலுத்துவோர் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் புதிய நேரடி வரிச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நிதி அமைச்சகம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த 8 வாரங்களாக தீவிர ஆலோசனை செய்து புதிய விதிகளை உருவாக்கி உள்ளனர்.

    கடந்த 2019 நாடாளுமன்றத்தில் நேரடி வரிவிதிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 3-வது முயற்சியாக நேரடி வரி சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.

    வரி செலுத்தக்கூடிய சாமானியர்கள் சட்ட விதிகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் புதிய விதிகளை அமைக்க வேண்டும் என குழுவிடம் மத்திய அரசு வலியுறுத்தியது. அதனடிப்படையில் நிபுணர்கள் குழு புதிய விதிகளை உருவாக்கி உள்ளது.

    இந்த புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி அல்லது 2-வது பாதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    8-வது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வால் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ள நிலையில், தனியார் துறை ஊழியர்கள் தங்களது செலவழிப்பு வருவாயை அதிகரிக்க வருமான வரி விலக்கு கோரி வருகின்றனர். தனிநபர்கள் மீதான வரிச்சுமையைத் தளர்த்துவது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பான நுகர்வைத் தூண்டுவதற்கு முக்கியமானது.

    2025-26 பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு அரசாங்கம் வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அரசாங்கம் அமைத்திருக்கும் அதே வேளையில், தனிநபர் வரி செலுத்துவோருக்கு சலுகைகள் அளித்தால் நடுத்தர வர்க்கத்தின் கைகளில் அதிக பணத்தை விட்டுச் செல்வதோடு பொருளாதாரத்தின் நுகர்வு உந்துதல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக வருமான வரித்துறை நிபுணர்கள் கூறுகையில்:-

    நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து வரி விலக்கு பெற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. "நடுத்தர வர்க்கம் தாங்கள் வரி செலுத்துவதாக நம்புகிறார்கள், ஆனால் அரசாங்கத்திடம் இருந்து போதுமான உதவிகளைப் பெறவில்லை."

    2013-14ல் 3.35 கோடியாக இருந்த வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2023-24ல் 7.54 கோடியாக உயர்ந்தாலும், உண்மையில் வரி செலுத்துவோர் 10 ஆண்டுகளில் 1.66 கோடியில் இருந்து 2.81 கோடியாக எப்படி உயர்ந்துள்ளனர். பூஜ்ஜிய வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தனிநபர்கள் 2013-14ல் 1.69 கோடியாக இருந்து 2023-24ல் 4.73 கோடியாக உயர்ந்துள்ளது.

    வருமான வரி விலக்கு வரம்பு பல ஆண்டுகளாக அதிகரித்து வருவதே இதற்கு காரணம். "இது அரசாங்கத்தின் சமூக-அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்தாலும், அது பொருளாதார நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லை. பல நாடுகளில், எந்த வருமானமும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

    பணவீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையிலும், அரசாங்கத்தின் வருமான வரி வசூலில் கார்ப்பரேட் வரி அதிகமாக உள்ளது. இதனால் தனி நபர் வரியில் மாற்றம் கொண்டு வரலாம் என்றனர்.

    • 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது.
    • நிதிசேகரிக்க வருமான வரியுடன் சேர்ந்து வசூலிக்கப்படும் கூடுதல் வரி.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளார்.

    பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய கூறுகள்:

    பட்ஜெட் மதிப்பீடுகள் [ BE ] - அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்படும் மதிப்பிடப்பட்ட நிதி.

    மூலதனச் செலவு [ capex ] - வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரசு பயன்படுத்தும் பணம்.

    செஸ் வரி [ cess ] - சுகாதாரப் பராமரிப்பு போன்ற குறிப்பிட்ட பொது உள்கட்டமைப்புகளுக்கு நிதிசேகரிக்க வருமான வரியுடன் சேர்ந்து வசூலிக்கப்படும் கூடுதல் வரி. 

    • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.
    • 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.

    இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவரின் உரையுடன் துவங்குகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற இருக்கிறார். முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பிறகு இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி நிறைவு பெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி பிப்ரவரி 1-ம் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவைும் நிதியமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளார்.

    • நாட்டின் சமச்சீரான வருவாய்க்கு வழி வகுத்துள்ளோம்.
    • வரி விலக்கானது அனைவருக்குமான கட்டணத்தை குறைக்கிறது.

    புதுடெல்லி:

    கடந்த பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்லிமெண்டில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதில் முக்கிய அம்சமாக இதுவரை ரூ.7 லட்சம் வரை இருந்த வருமானவரி விலக்கை ரூ.12 லட்சமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். இது மத்திய தர வர்க்கத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது வரிவிலக்கு தொடர்பாக நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    ஏன் ரூ.7 லட்சம் வரை இருந்த வருமானவரி விலக்கை ரூ.12 லட்சமாக உயர்த்தியிருக்கிறீர்கள் என எல்லோரும் கேட்கிறார்கள். மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குவோரும் பயனடையவே இந்த வருமான வரி விலக்கை உயர்த்தியுள்ளோம். இதை நாங்கள் 2 வழிகளில் சாதித்துள்ளோம். முதலில் வரி விதிப்பில் உள்ள அடுக்குகளை குறைத்து நாட்டின் சமச்சீரான வருவாய்க்கு வழி வகுத்துள்ளோம்.

    2-வதாக வரிவிதிப்பில் உள்ள அடுக்குகளை விரிவுபடுத்தி நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சுமையை குறைத்து எல்லோரையும் உள்ளடக்கிய நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளோம்.

    நேர்மையாக வரி செலுத்துவோரில் பெரும்பான்மையினராக உள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஏதாவது சலுகை அளிக்க வேண்டும் என்று விரும்பினோம்.

    இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேசினேன். உடனே அவர் ஒப்புக்கொண்டார். வரிச்சலுகை அளிக்கலாம் என்ற தன் ஆலோசனையை வழங்கினார்.

    அது எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து தெரிவிக்கும்படி என்னை பணித்தார்.

    அதன்படி நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டு, பல ஆலோசனைகள் பெறப்பட்டு, ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்ற யோசனையை பிரதமரிடம் தெரிவித்தேன். உடனே அவர் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மரியாதை செய்யும் வகையில், அவர்களுக்கான சுமையை குறைக்கும் வகையில், இந்த வரிச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முழு காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைகள் தான்.

    இதை கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமலில் இருந்த வரி விதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் ஒருவரின் பாக்கெட்டில் ரூ.1 லட்சம் அதிகமாக உள்ளது. அதன் மீதான வரி அப்போது ரூ.1 லட்சம், இப்போது பூஜ்ஜியம் ஆகியிருக்கிறது.

    மேலும் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் 2014 வரை ரூ.2 லட்சம் வரி செலுத்த வேண்டும், இப்போது அது பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் அவரின் பாக்கெட்டில் ரூ.2 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.

    இந்த வரி விலக்கானது அனைவருக்குமான கட்டணத்தை குறைக்கிறது. அதாவது ரூ.24 லட்சம் வரை சம்பாதிக்கும் ஒருவர், 2014-ல் ரூ.5.6 லட்சம் வரி செலுத்தினார். இப்போது அது ரூ.3 லட்சமாக குறைகிறது. இதனால் அவர் ரூ.2.6 லட்சம் சேமிப்பவராக மாறி உள்ளார்.

    இதனால் ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் மட்டும் பயனடையவில்லை வரி விலக்கின் காரணமாக அதிகமாக சம்பாதிப்பவர்கள் கூட பயனடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×