என் மலர்
நீங்கள் தேடியது "பீகார் தேர்தல் 2025"
- 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன.
- 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.
கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்
இந்நிலையில் பீகாரில் பொறுப்பேற்ற 24 அமைச்சர்களில் 11 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை வெளியிட்டுள்ளது.
24 அமைச்சர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
24 அமைச்சர்களில் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இதில் பாஜகவைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஜேடியுவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், லோக் சக்தியின் 2 அமைச்சர்களும், இந்துஸ்தானி அவாமியின் ஒரு அமைச்சரும் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல் 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
- ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.
- பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்கு சதவீதம் வெறும் 2-3% மட்டுமே. அத்துடன் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையையும் இழந்தனர்.
இந்நிலையில் அங்கில தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தற்போது எந்தத் திடமான ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
மாதக்கணக்கில் அவர் மேற்கொண்ட ஜன சூராஜ் யாத்திரையின்போது தனது குழு சேகரித்த கள ஆய்வுக் கருத்துகளுக்கும், உண்மையான வாக்குப் பதிவின் போக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், இதன் மூலம், தேர்தல் நடைமுறையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் தெரிவித்தார்.
சில வெல்ல முடியாத சக்திகள் தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாகவும், பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் குறித்து சந்தேகம் இருந்தபோதும் தற்போது இவை ஆதாரம் இல்லாத வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் என்டிஏ அரசு சார்பில் தேர்தலுக்கு முன் ஒன்றரை கோடி பெண்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.10,000 விநியோகம் செய்யப்பட்டது குறித்து விமர்சித்த அவர், ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.
- துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
- பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர் அமைசர்களாக பதவியேற்றனர்.
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.
கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
இந்நிலையில் வியாழக்கிழமை பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு மட்டுமே இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையின்கீழ் காவல்துறை, உளவுத்துறை, பொது சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் வருகின்றன.
கடந்த ௨௦ ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
முந்தைய ஆட்சியில் சாம்ராட் சவுத்ரி வகித்து வந்த நிதி மற்றும் வணிக வரி இலாகா, ஜே.டியுவின் பிரேந்திர பிரசாத் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் துறைக பாஜகவை சேர்ந்த மற்றொரு துணை முதல்வரான விஜய் சின்ஹாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல் விவசாயம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தொழில்துறை பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி 9வது இடத்தில் உள்ளார்.
- பீகார் முதல்வராக கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் நிதிஷ் குமார் 8வது இடத்தில் உள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றுள்ளார்.
இந்தியாவில் அவரை போல அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்தவர்களின் பட்டியல் கவனம் பெற்று வருகிறது.
அதனபடி, சிக்கிம் மாநிலத்தை 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த பவன் குமார் சாம்லிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஒடிசாவை 24 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக 23 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் ஜோதி பாசு 3வது இடத்திலும், அருணாசல பிரதேச முதல்வராக 22 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த கோகாங் அபாங் 4வது இடத்திலும் உள்ளனர்.
5வது இடத்தில மிசோராமை 22 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட லால் தன்ஹாவ்லாவும், 6வது இடத்தில் ஹிமாச்சல பிரதேசத்தை 21 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட வீரபத்ர சிங் -உம் உள்ளனர்.
திரிபுரா முதல்வராக 19 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த மாணிக் சர்க்கார் 7வது இடத்தில் உள்ளார். பீகார் முதல்வராக கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் நிதிஷ் குமார் 8வது இடத்தில் உள்ளார்.
தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி 9வது இடத்திலும் பஞ்சாபை 18 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட பிரகாஷ் சிங் பாதல் 10வது இடத்திலும் உள்ளனர்.
- இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.
புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என்றும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் ஜன் சுராஜ் என்ற கட்சியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கினார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஜெடியுவிக்கு தனது கட்சி தான் மாற்று என்று பிரசாரம் செய்த ஜன்சுராஜ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தெரிதலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பின் என்டிஏ கூட்டணி பீகாரில் ஒன்றரை கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அதன் வெற்றிக்கு காரணம் என்றும் உலக வங்கி வழங்கிய ரூ.12,000 கோடி நிதியை தேர்தலில் வெல்ல என்டிஏ தவறாக பயன்படுத்தியதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார்.
அதேநேரம் ஜன் சுராஜ் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாகவும், பீகாரில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
இந்த சூழலில் தோல்விக்கு பிராயச்சித்தமாக பிரசாந்த் கிஷோர் ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டுள்ளார்.
பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருக்கும் அவருடன் ஜன் சுராஜ் லத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் இன்று மெளன விரதம் இருக்கும் இதே இடத்தில்தான், நூற்றாண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி மெளன விரதம் மேற்கொண்டார். முன்னதாக ஜன் சுராஜ் கட்சியை தொடங்கும் முன் இதே இடத்தில் இருந்து 3,500 கி.மீ நடைப்பயணத்தை பிரசாத் கிஷோர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.
- பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பாட்னா:
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜ.க. 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை விஜய் சவுத்ரி மற்றும் உமேஷ் குஷ்வாகா ஆகியோர் முன் மொழிந்தனர். பிஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.
பின்னர் பேசிய நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபைக்குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
மாநிலத்தின் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் நேற்று நடந்தது.
இதில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஜய் குமார் சின்கா தேர்வானார்.
பா.ஜ.க. சட்டசபைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான மேலிட பார்வையாளராக உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டு இருந்தார்.
மேலும் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணை பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பா.ஜ.க. சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாம்ராட் சவுத்ரி, முந்தைய ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற என்னுடைய முடிவு தவறாக கருதலாம்.
- திருப்திகரமான முடிவுக்கு இன்னும அதிகப்படியாக பணியாற்ற வேண்டும்.
பீகார் சட்டசபை தேர்தலில் அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கட்சி ஜன் சுராஜ் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட அக்கட்சி 4 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் குமார் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த முடிவடை தவறாக கருதலாம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற என்னுடைய முடிவு தவறாக கருதலாம். திருப்திகரமான முடிவுக்கு இன்னும அதிகப்படியாக பணியாற்ற வேண்டும். எங்கள் கட்சி 4 சதவீதத்திற்கு கீழ் வாக்குகள் பெறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. பீகாரில் வெற்றி பெறாமல் பின் வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று எனக்குத் தெரியாது.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 60 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதிஷ் குமார் அரசு வழங்காமல் இருந்திருந்தால், ஐக்கிய ஜனதா தளம் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது.
- ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
- அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்களின் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வெற்றி பெற்றது.
நாளை மறுதினம் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள். இலாகா பிரிப்பதில் பாஜக- நிதிஷ் குமார் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சித் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டதில் தலைவராக தேர்வு செய்யப்படுவார். பின்னர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி, தனக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.-க்களின் கடிதத்தை வழங்குவார்.
நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றும் விழாவில பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பதவி ஏற்பு விழா நடைபெறும் காந்தி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- சங்கர் ஒரு ஆர்ஜேடி ஆதரவாளர், அதே நேரத்தில் அவரது மாமாக்கள் இருவரும் நிதிஷ் குமாரின் ஜேடியு அபிமானிகள்.
- மிதிக்கப்பட்டதில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து தொடங்கிய விவாதம் சர்ச்சையாக மாறி ஒரு இளைஞனின் உயிரைப் பறித்ததுள்ளது. குடிபோதையில் இருந்தபோது அந்த இளைஞனை அவரது சொந்த மாமாக்கள் மிதித்து கொன்றனர்.
பீகாரின் சிவ்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் மஞ்சி (22) அவரின் மாமாக்கள் ராஜேஷ் மஞ்சி, துபானி மஞ்சி ஆகியோர் மத்தியப் பிரதேசத்தின் குணாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். ராஜேஷ் மற்றும் துஃபானி மஞ்சியின் மருமகன் (சகோதரி மகன்) சங்கர் மஞ்சி.
இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் மூவரும் மது அருந்தி பேசிக் கொண்டிருந்தபோது, விவாதம் அரசியலுக்குத் திரும்பியது. சங்கர் ஒரு ஆர்ஜேடி ஆதரவாளர், அதே நேரத்தில் அவரது மாமாக்கள் இருவரும் நிதிஷ் குமாரின் ஜேடியு அபிமானிகள்.
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்ஜேடி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட ஜேடியு மகத்தான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து குடிபோதையில் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிதிஷ் குமார் ஆதாரவாளர்களான மாமாக்கள் ராஜேஷும் துபானி மஞ்சியும் சேர்ந்து சங்கர் மஞ்சியைத் தாக்கினர். அவர்கள் சங்கரை அருகிலுள்ள சேற்றுக்கு இழுத்துச் சென்று மாறி மாறி மிதித்துள்ளனர்.
சண்டை குறித்து உள்ளூர்வாசிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சங்கர் மிதிக்கப்பட்டதில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்த போலீசார், சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
- நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் முற்றிலும் அது தோல்வியடைந்தது.
- நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு என்றார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. வரும் 20-ம் தேதி நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.
இந்நிலையில், தேர்தலில் ஏற்படட் தோல்வி குறித்து ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் அது முற்றிலும் தோல்வியடைந்தது என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக சில பங்கைக் கொண்டிருந்தோம். பொதுமக்கள் எங்களை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை நாங்கள் விளக்கிய விதத்தில் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும். பொதுமக்கள் எங்கள்மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால் அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது. நாங்கள் மீண்டும் அதே சக்தியுடன் நிற்போம்.
நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு. ஐக்கிய ஜனதா தளம் 25 இடத்தை வென்றால் என்ற எனது கருத்து பற்றி மக்கள் நிறைய பேசுகிறார்கள் - நான் இன்னும் அதை ஆதரிக்கிறேன். நிதிஷ்குமார் 1.5 கோடி பெண்களுக்கு தான் உறுதியளித்த ரூ.2 லட்சத்தை மாற்றி, வாக்குகளை வாங்கி வெற்றி பெறவில்லை என்பதை நிரூபித்தால் நான் எந்த ஒரு குறையும் இல்லாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தெரிவித்தார்.
- நிதிஷ் குமார் 20-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
- இலாகா தொடர்பாக பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதனால் 20-ந்தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி வழங்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் அமைச்சராக தேர்வு செய்யக் கூடியவர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
யார் யாருக்கு எந்த இலாகா என்பதை முடிவு செய்ய பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இரு கட்சிகளுக்கும் இடையில் பெரும்பாலான இலாகாக்களை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், உள்துறை அமைச்சர் இலாகாவை பாஜக-வுக்கு வழங்க ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. அதேபோல், சபாநாயகர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்க பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது.
இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவுடன்தான் செயல்பட வேண்டிய நிலை. ஒருவேளை மோதல் ஏற்பட்டால் ஆட்சி மற்றும் பெரும்பான்மையை தக்கவைக்க இரண்டு பதவிகளும்தான் முக்கியமானவை. இதனால் இந்த பதவிகளை தக்கவைக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டு வருகின்றனர்.






