Earthquake | ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்... டெல்லியில் உணரப்பட்ட நிலஅதிர்வால் மக்கள் அச்சம்

அதிர்வுகள் லேசான தன்மையுடையவை என விவரிக்கப்பட்டன.
Earthquake | ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்... டெல்லியில் உணரப்பட்ட நிலஅதிர்வால் மக்கள் அச்சம்
Published on

ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நில அதிர்வுகளை உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, தராவான் அருகே 71.01 டிகிரி கிழக்கு மற்றும் 36.52 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்திருந்தது.

பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் கார்கில் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, மேலும் இந்த அதிர்வுகள் லேசான தன்மையுடையவை என விவரிக்கப்பட்டன.

இந்த ஆண்டு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் புது டெல்லியில் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தேசிய தலைநகரின் சில பகுதிகளில் குறுகிய நேர நில அதிர்வுகளை ஏற்படுத்தியது.

தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் (NCS) கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் காலை சுமார் 8.44 மணியளவில் ஏற்பட்டது. இதன் மையப்புள்ளி வடக்கு டெல்லியில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com