TN Assembly Election | தமிழகத்திற்கு வேட்பு மனு தாக்கல் எப்போது? ழுழு விவரம்

TN Assembly Election | தமிழகத்திற்கு வேட்பு மனு தாக்கல் எப்போது? ழுழு விவரம்
Published on

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாலை 4 மணியளவில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், மே 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

இதேபோல், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 6ம் தேதியுடன் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் ஏப்ரல் 7ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது.

வேட்புபமனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com