

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா, நடிகை த்ரிஷா மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமரின் வாழ்த்துக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
“முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதையொட்டி, எனக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த நரேந்திர மோடி அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது மக்களின் நலனும், முன்னேற்றமுமே எங்களின் ஒரே குறிக்கோளாகும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு, ஒன்றிய அரசின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.