மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் - கிரிஷ் சோடங்கர்

மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிகளை செய்வோம்.
மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் - கிரிஷ் சோடங்கர்
Published on

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு ராகுல்காந்தி வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

சத்யமூர்த்தி பவனுக்கு வந்த ராகுல்காந்தி, சிறந்த ஆட்சியை தந்த காமராஜர் ஆட்சி குறித்து நினைவு கூர்ந்தார். மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிகளை செய்வோம்.

இந்த அரசில் ஒரு அங்கமாக உள்ளோம். முதற்கட்டமாக நடந்த அமைச்சர்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சி பட்டியலை தராததால் பங்கேற்க முடியவில்லை.

அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார். மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு தனது புதிய பயணத்தை அவர் தொடங்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com