

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார். திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா காட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் என்றார். வி.சி.க. ஆதரவு தந்ததால் த.வெ.க.வின் பலம் 118ஆக உயர்ந்துள்ளது.
இக்கடிதத்தை பெற்ற ஆதவ் அர்ஜூனா இதனை த.வெ.க. தலைவர் விஜயிடம் வழங்குகிறார். வி.சி.க.வின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கும் த.வெ.க. தலைவர் விஜய், அதன் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.