

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் வன்னி அரசு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்துக்கு தற்போதைக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.
கம்யூனிஸ்டுகள் கட்சிகளைப் போலவே நாங்களும் அமைச்சரவையில் பங்கு கொள்ளவில்லை.
வருங்காலத்தில் ஆட்சியில் பங்கேற்பது பற்றி முடிவு செய்யப்படும்.
நான் சொந்த காரணங்களுக்காக ஊருக்கு சென்றுவிட்டேன். அதனால் ஆதரவு அளிக்க தாமதம் ஏற்பட்டது.
திருமாவளவன் துணை முதல் மந்திரி பதவி வகிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் மட்டுமின்றி, கட்சியினரின் விருப்பமும்.
திருமாவளவன் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.
திமுகவுடன் தோழமை தொடர்கிறது என தெரிவித்தார்.