

சென்னை:
இன்று தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் ஆற்காடு வீராசாமியின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
"தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்!
உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப்பற்றாளர்.
எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;
என்றும் மானமிகு உடன் பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன் ஆர்க்காட்டார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.