என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும், பகல் கனவாகவும்தான் இருக்கும்- எடப்பாடி பழனிசாமி
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்.
- இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும். ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்.
இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?
ஒரு கூட்டணி அமைந்ததற்கே உங்களுக்கு பொறுக்க முடியவில்லை. இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






