நயினார் நாகேந்திரனை அமலாக்கத்துறை விசாரிக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
நயினார் நாகேந்திரனை அமலாக்கத்துறை விசாரிக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
Published on

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலின்போது ரெயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,

பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

நயினார், கேசவ விநாயகம் பாஜகவை சேர்ந்தவர்களாக இருப்பதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com