அ.தி.மு.க. பிளவு? 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு!

இபிஎஸை அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க 17 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பிளவு? 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு!
Published on

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. இதில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற 232 எம்.எல்.ஏக்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை காலை 9:30 மணிக்கு நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் 17 பேர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு ஆதரவாக கடிதம் வழங்கியுள்ளனர். அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என 47 எம்எல்ஏக்களில் வெறும் 17 பேர் மட்டுமே கடிதம் வழங்கியுள்ளனர்.

வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருதரப்பு செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com