கட்சியை தொடங்கியவுடன் அடுத்த முதலமைச்சர்! விஜயை மறைமுகமாக சாடிய மு.க.ஸ்டாலின்

மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க. வரலாற்றை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.
கட்சியை தொடங்கியவுடன் அடுத்த முதலமைச்சர்! விஜயை மறைமுகமாக சாடிய மு.க.ஸ்டாலின்
Published on

சென்னையில் தி.மு.க.வின் 75-வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்த துணை முதலமைச்சர் உதயநிதியை 'கொள்கை இளவல்' எனக் குறிப்பிட்டு வாழ்த்தினார். அறிவு திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் வேண்டும் நடத்திட வேண்டும் என உதயநிதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

* திருவள்ளுவர் கோட்டமே திராவிடக்கூட்டமாக மாறியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

* உலகத்தமிழர்கள் உள்ளத்தில் தமிழை உயர்த்திப் பிடிக்கும் பேரியக்கம் தி.மு.க.

* தி.மு.க.வை தொடங்கியது அண்ணா, 50 ஆண்டுகளாக கட்டி காத்தவர் கலைஞர்.

* அறிவொளியை பரப்புவதையே தலையாய கடமையாக கொண்டு செயல்படுகிறது தி.மு.க.

* மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.

* கட்சியை தொடங்கியவுடன் அடுத்த முதலமைச்சர் என அறிவித்து விட்டு நாம் ஆட்சிக்கு வரவில்லை.

* வரலாற்றை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.

* தி.மு.க.வை போல் வெற்றி பெற தி.மு.க.வை போல் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை

* ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான்.

* தி.மு.க.வை போல் வெற்றி பெற வேண்டும் என சில அறிவிலிகள் கனவு காண்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com