ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள் சேவை தொடக்கம்- புதிய வாகனத்தை இயக்கி பார்த்தார் முதலமைச்சர்

ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை கொடியசைத்து முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள் சேவை தொடக்கம்- புதிய வாகனத்தை இயக்கி பார்த்தார் முதலமைச்சர்
Published on

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை சார்பில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை கொடியசைத்து முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, வாகனத்தின் திறன் மற்றும் இயக்கத்தை பரிசோதிக்க ஒரு வாகனத்தை தானே ஓட்டி பார்த்து முதலமைச்சர் விஜய் சோதனை செய்தார்.

இதையடுத்து வாகன ஓட்டுநர்களுக்கு வாகனத்தின் சாவியை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com