கை சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசனுக்கு நிர்பந்தம்

கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கை சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசனுக்கு நிர்பந்தம்
Published on

சென்னை:

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட உள்ளது. கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சின்னத்தி லேயே கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். அதுபோன்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்திலேயே கமல்ஹாசனை போட்டியிட வலியுறுத்தி நிர்பந்தம் செய்வது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதை விட கை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்று கமல்ஹாசனிடம் காங்கிரஸ் கட்சியினர் அறிவுறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை ஏற்று கமல்ஹாசன் கை சின்னத்தில் களம் இறங்குவரா? இல்லை மக்கள் நீதி மய்யம் கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடு வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com