

தமிழ்நாட்டில் 13 முறை எம்.எல்.ஏவாக தேர்வானவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அவரது சாதனையை சமன் செய்யும் இடத்தில் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ளார். 1971-ம் ஆண்டு முதன் முறையாக காட்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், ராணிப்பேட்டை தொகுதியில் 1977 மற்றும் 1980-ம் ஆண்டுகளிலும், பிறகு காட்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
இதில் காட்பாடி தொகுதியில் 1984 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் தோல்வியை தழுவி உள்ளார். இந்த தேர்தலில் துரைமுருகன் 13-வது முறையாக போட்டியிடுவது சாதனையாக கருதப்பட்டது. வயதான காலத்தில் அவர் போட்டியில் இருந்தது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த முறை எப்படியும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் வேலை செய்தனர்.
1991-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு துரைமுருகன் இந்த தேர்தலில் காட்பாடியில் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார். காட்பாடி தொகுதியில் 2 முறை அ.தி.மு.க.விடம் வெற்றியை பறிகொடுத்தவர் இந்த முறை த.வெ.க.விடம் பறிகொடுத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 13-வது முறை எம்.எல்.ஏ. ஆகும் சாதனையை முறியடிக்கும் அவரது கனவு நிறைவேறவில்லை.