என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத்திய - மாநில அரசு உறவு குறித்து அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்
- அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
- பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி தான்.
* இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.
* முயன்றால் மீண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்.
* அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
* இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும்.
* பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.
* மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடும் வளரும் என்பதை மத்திய அரசிற்கு உணர்த்துவோம்.
* இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல. இந்திய மக்களின் வாழ்வியலுக்கும் வளர்ச்சிக்குமான கோரிக்கை என்று கூறினார்.
இதையடுத்து மத்திய - மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலைக் குழு அறிக்கையை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.






