2026-ல் நெல்லை தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் - தி.மு.க. நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

வரும் சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.நெல்லை சட்டசபை தொகுதி உறுப்பினராக தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
2026-ல் நெல்லை தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் - தி.மு.க. நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் சங்கரன்கோவில், திருநெல்வேலி சட்டசபை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தி.மு.க. தெற்கு மண்டல பொறுப்பாளர் எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார்.

இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். நெல்லை தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் பதவிகள் பறிக்கப்படும் என்று நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

நெல்லை சட்டசபை தொகுதி உறுப்பினராக தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com