என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
- பஹல்காம் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துவர் பரமேஸ்வரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்பேசியில் தொடர்பு கொண்டு மருத்துவர் பரமேஸ்வரனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
பரமேஸ்வரன் மனைவியிடம் முதலமைச்சர் பேசினார். அப்போது அவர், தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.






