

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சமீபத்தில் தவெகவில் இணைந்ததை தொடர்ந்து இன்று முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.
இதுகுறித்த பதிவில் கூறியிருப்பதாவது:-
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.