search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவாரா? மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
    X

    கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவாரா? மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி

    • தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடுவதற்காகவும், அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
    • அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழகத்தில் ஜெயிக்க முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.

    கோவை:

    கோவையில் இன்று நடைபெறும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தனர்.

    விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் இன்று 2-வது முறையாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடுவதற்காகவும், அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டணி குறித்து, வேட்பாளர்கள் குறித்து தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள். மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டால் அதற்கான பணியை செய்யவும் தயாராக உள்ளோம்.

    விஜய் புதிய கட்சி தொடங்கினாலும், பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அவர்கள் பார்வையாளர்களாக இருப்பர் என அவரே சொல்லிவிட்டார். பாராளுமன்ற தேர்தலில் அவருடைய பங்கு குறைவாக தான் இருக்கும்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலை மையில் 19 சதவீத வாக்குகள் மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் வெற்றி என பார்த்தோம். அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழ கத்தில் ஜெயிக்க முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.

    நாட்டை பாதுகாக்கும் முக்கிய அமைப்பு என்.ஐ.ஏ. நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

    அவர்களின் வேலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    Next Story
    ×