search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தெற்கு வளர்கிறது - வடக்குக்கும் சேர்த்து வாரி வழங்குகிறது!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தெற்கு வளர்கிறது - வடக்குக்கும் சேர்த்து வாரி வழங்குகிறது!

    • இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.
    • நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * எல்லாருக்கும் எல்லாம் என்னும் விதையை விதைத்தவர் பெரியார். அதனை ஆட்சியில் செய்து காட்டியவர் கருணாநிதி.

    * இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.

    * தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு நாளும் சிந்தித்து செயல்படுகிறேன்.

    * அரசின் உரையை அப்படியே வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. கவர்னர் அவரது அரசியலுக்காக சட்டசபையை பயன்படுத்திக்கொண்டார்.

    * திராவிட மாடல் வழித்தடத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

    * சிறு பிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம்.

    * புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். எவர்வரினும் நில்லேன். அஞ்சேன் என்பதுதான் இவர்களுக்கு என் பதில்.

    * கலைஞர் இன்று ஆட்சி செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே நான் ஆட்சி நடத்தி வருகிறேன்.

    * தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களில், தமிழகம் 3-வது இடத்தில் உள்ளோம்.

    * ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * இந்திய பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருகிறது, தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது திராவிட மாடலின் சாதனை.

    * திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டால் நேரம் போதாது.

    * நாள்காட்டியின் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

    * முதலமைச்சர் பொறுப்புக்கு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை அனைத்தும் சாதனை, முன்னேற்ற மாதங்கள்.

    * ஜி.டி.பி.யில் இந்தியா 2ம் இடம்.

    * மின்னணு உற்பத்தியில் 6-வது இடம்.

    * செஸ் விளையாட்டு, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

    * காலை உணவு திட்டத்தை தினத்தந்தி நாளிதழ் "அன்று காமராஜர், இன்று ஸ்டாலின்" என பாராட்டியது.

    * ஜி.எஸ்.டி. வரி முறையால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு

    * மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை.

    * எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில் திட்டங்களை தருவதில்லை.

    * மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சோக கதையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    * பாஜக உடன் கூட்டணியில் இருந்தபோது பேசாத எதிர்க்கட்சி தலைவர் இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.

    Next Story
    ×