search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் மருத்துவமனைகளுக்கு மூக்கு வழியாக செலுத்தும் 3 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியது
    X

    தனியார் மருத்துவமனைகளுக்கு மூக்கு வழியாக செலுத்தும் 3 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியது

    • பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது.
    • இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தின் 3 லட்சம் டோஸ்கள் இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது.

    'இன்கோவாக்' எனப்படும் இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி 'இன்கோவாக்' கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது கோவின்-ல் கிடைக்கிறது.

    இன்கோவாக் மருந்தின் தனியார் சந்தை விலை ரூ.800-க்கும், அரசு வினியோகத்துக்கான விலை ரூ.325 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தின் 3 லட்சம் டோஸ்கள் இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "2 நாட்களுக்கு நாங்கள் சில தனியார் மருத்துவமனைகளுக்கு 3 லட்சம் டோஸ் இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பியுள்ளோம். சில நாடுகள் இந்த தடுப்பு மருந்துகளுக்காக எங்களை அணுகியுள்ளன," என்றார்.

    Next Story
    ×