search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடியை கண்டித்து இலவசமாக வடை வழங்கி தி.மு.க.வினர் நூதன போராட்டம்
    X

    பிரதமர் மோடியை கண்டித்து இலவசமாக வடை வழங்கி தி.மு.க.வினர் நூதன போராட்டம்

    • பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
    • தி.மு.க.வினர் நடத்திய இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி நகர தி.மு.க. சார்பில் செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் புதிய பஸ்நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, பொதுமக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு பொய்யானது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை என குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடந்தது.

    பிரதமர் மோடி திட்டங்களை நிறைவேற்றாமல் வாயால் வடை சுடுவதாக கூறியும், அதனை கண்டித்தும் போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வடை வழங்கினர். இதில் பங்கேற்றவர்கள் வெள்ளை சட்டை, வேட்டி அணிந்து மோடியின் முகம் பொறித்த முகமூடியை அணிந்திருந்தனர். தோளில் காவித்துண்டும் அணிந்திருந்தனர்.

    தி.மு.க.வினர் நடத்திய இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×