search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதா-பா.ம.க. கூட்டணி இன்று உறுதியாக வாய்ப்பு
    X

    பா.ஜனதா-பா.ம.க. கூட்டணி இன்று உறுதியாக வாய்ப்பு

    • பா.ம.க., தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜனதா கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.
    • இரு கட்சிகளும் எந்த அணியில் சேருவது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணியை உறுதிப்படுத்துவதில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வுடன் கூட்ட ணிக்கு முயற்சித்தனர். ஆனால் அ.தி.மு.க. ஏற்கவில்லை. இதனால் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதில் பா.ம.க., தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜனதா கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.

    பா.ம.க.வையும், தே.மு.தி.க.வையும் இழுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அ.தி.மு.க.வுடனும் பேசிக் கொண்டிருப்பதால் இரு கட்சிகளும் எந்த அணியில் சேருவது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை.


    நேற்று இரவு மத்திய மந்திரிகள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் சென்னை வந்தனர். கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்களை டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது கூட்டணியை உறுதி செய்து உள்ளார்.

    பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. வுடன் பேசிய பிறகு தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.

    இன்று பகலில் பா.ம.க. தலைவர் அன்புமணியை சந்தித்து பேசுகிறார்கள். அதன்பிறகு டாக்டர் ராமதாசையும் சந்தித்து பேசி கூட்டணியை உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    பின்னர் தே.மு.தி.க.வுடனும் பேச திட்டமிட்டு உள்ளார்கள்.

    Next Story
    ×