search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்- அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா.வுக்கு கடந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேப்போன்று இடைத்தேர்தலிலும் த.மா.கா.வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் வில்லரசம்பட்டி நால் ரோட்டில் உள்ள லட்சுமி துரைசாமி மஹாலில் நடைபெற உள்ளது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை தங்குகிறார்கள். முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்கள் வகுக்கப்படுகின்றன.

    Next Story
    ×